பக்கம் எண் :

623திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

பட்டினத்து அடிகள்
அருளிச் செய்த

28. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

862.

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப்போற் றாது

5

வலம்புரிநெடுமால் ஏன மாகி

நிலம்புக்(கு)
ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பக்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின் றருளித்

10

திகழ்ந்துள தொருபால் திருவடி; அகஞ்சேந்து

மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த

15

சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து

பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து

20

நச்செயிற்றரவக் கச்சையாப் புறுத்துப்

பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி
அரத்த ஆடை விரித்துமீ துறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை

25

செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங்

கேழற் கோடும் வீழ்திரள் அக்கும்
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து