862. | தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து கூற்றின் ஆற்றல் மாற்றிப்போற் றாது |
5 | வலம்புரிநெடுமால் ஏன மாகி நிலம்புக்(கு) ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பக்தி அடியவர் பச்சிலை இடினும் முத்தி கொடுத்து முன்னின் றருளித் |
10 | திகழ்ந்துள தொருபால் திருவடி; அகஞ்சேந்து மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர் மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த |
15 | சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத் தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து |
20 | நச்செயிற்றரவக் கச்சையாப் புறுத்துப் பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி அரத்த ஆடை விரித்துமீ துறீஇ இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை |
25 | செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங் கேழற் கோடும் வீழ்திரள் அக்கும் நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து |