| திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி; இனைய வண்ணத்து நினைவருங் காட்சி | 65 | இருவயின் உருவும் ஒருவயிற் றாகி வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க வாணுதல் பாகம் நாணுதல் செய்ய வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங் | 70 | குலகம்ஏழும் பன்முறை ஈன்று மருதிடங் கொண்ட மருத வாண திருவடி பரவுதும் யாமே நெடுநாள் இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும் சிறைக்கருப் பாசயம் சேரா | 75 | மறித்தும் பிறவா வாழ்வுபெறற் பொருட்டே. | | 1 |
862. குறிப்புரை: இத்திருப்பாட்டு திருவிடை மருதூர்ப் பெருமானை மாதொரு பாதி (அர்த்தநாரி) வடிவினனாக வருணித்து விளித்துக் கருத்தை விண்ணப்பிக்கின்றது. அடி-17 “ஒரு பால் திருவடி”என்பதை முதலில் வைத்து, ‘மலர்ந்து, சிவந்து, புனைந்து, நிமிர்ந்து, அருளித் திகழ்ந்துளது’ என்க. தெய்வத் தாமரை - தேவலோகத் தாமரை. ‘அதனது செவ்விபோல’என்க. செவ்வி - மலரும் நேரம். அஃது ஆகுபெயராய், அப்பொழுதுமலரும் மலர்ச்சியைக் குறித்தது. ‘இன் உவம உருபு. வாடா மலர் - கற்பக மலர் தோடு - இதழ். இது பண்பு பற்றியஉவமையாய் வந்தது. அலம்ப - ஒலிக்க; இவ் எச்சம்இதன் காலத்தை உணர்த்தி நின்றது. எனவே - ‘ஒலிக்கும்ஒடத்துத் தான் கழலைப் புனைந்து’ என ஆற்றல் பற்றிக்கொள்ளப்படும். இரண்டும் மாறி மாறி ஒலியாது,ஒருங்கொலித்தல் பற்றி இவ்வாறு கூறினார். இது மற்றொருபால்திருவடிக்கும் ஒக்கும். கூற்று - கூற்றுவன். யமன். ‘நெடுமால்போற்றாது ஏனமாகி அகழ’ என்க. ‘திருவடி,போற்றிக் காணத் தக்கதல்லது, முயன்று காணத் தக்கதன்று’என்றற்கு, “போற்றாது” என்றார். “தொழுவார்க்கேயருளுவது சிவபெருமான் எனத்தொழார்”1 எனச் சேக்கிழாரும்அருளிச்செய்தார். நிமிர்ந்து - அப்பாற்பட்டு. அடி-17 “ஒருபால் திருவடி”என்பதை, “மறுவில் கற்பகத்து உறு தளிர்” என்பதற்கு முன்னே வைத்து, ‘சேந்து, செவ்வித்தாகி, நொந்து,சிவந்து திருவொடும் பொலியும்’ என்க. அகம் - உள்ளிடம்.சேந்து
1 பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் -78.
|