பக்கம் எண் :

629திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

கட்டளைக் கலித்துறை

864.

வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே.

அகவற்பா

865.

ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத்
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக்

5

குயிலென மொழியும் மயிலியல் சாயல்

மான்மாற விழிக்கும் மானார் செல்வத்(து)
இடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடராப் பூரணபுராண

10நாராணன் அறியாக் காரணக் கடவுள்

முடிக்கும் ஆற்றல். அருள் - எல்லா உயிர்களிடத்தும் காட்டும் இரக்கம். இதனை யுடையார்க்கு இறைவனது அருள் தானே கிடைக்கும் ‘ஒருவரும்’ என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது. கருதா - விரும்பாத. என்பு ஆர்க்கும் - எலும்பைப் பூணுகின்ற. தொல்லை - பழைமை; அநாதி. வரும் - கிடைக்கும்.

864.குறிப்புரை: ‘இறந்தும், பிறந்தும் வருந்தேன்’ என்க. “புகழ் மாமருதில்..... இருந்தேன்” என்பதை முதற்கண் வைத்து உரைக்க.

865.குறிப்புரை: அடி -30 “இறைவ” என்பதையும், அடி - 33 “நஞ்சுபொதி.... கண்ணுதலோயோ” என்பதையும் அடி - 12 யோக நாயக” என்பதன் பின்னர்க் கூட்டி யுரைக்க.

‘ஒன்றினொடு ஒன்று சேர்ந்து’ எனஒருசொல் வருவிக்க. ‘முகிலைத் தடவி’ எனவும், ‘மாளிகையில் வகுத்த’ எனவும் கொள்க. ‘செம்மை வீதி, பூ இயல்வீதி’ எனத் தனித் தனி இயையும். பூ இயல் - அழகுவிளங்குகின்ற. “மான் ஆர்” என்பதில் ‘மான்’என்னும் அஃறிணையியற் பெயர் இங்குப் பன்மைப்பாலதாய் உவம ஆகுபெயராகி மகளிரைக் குறித்தது. வீதி ஆர் - வீதியின்கண் நிறைந்த. மாற - தோற்க. புராணன் - பழையோன். சோதி - திரட்சியான