| இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும் வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச் சின்னச் சீரை துன்னல் கோவணம் அறுதற் கீளொடு பெறுவது புனைந்து | | 50 | சிதவல்ஓடொன் றுதவுழி எடுத்தாங்(கு) இடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று படுதரைப் பாயலிற் பள்ளி மேல் ஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின் | | 55 | செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும் பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக் குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் இருவகைப் பொருளும் ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் | | 60 | நின்சீர்அடியார் தஞ்சீர் அடியார்க்(கு) அடிமை பூண்டு நெடுநாட் பழகி முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர் காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக் கண்டது காணின் அல்லதொன்(று) | | 65 | உண்டோமற்றெனக் குள்ளது பிறிதே. | | 7 |
பழிமலைந் தெய்திய ஆக்கத்தின்,சான்றோர் கழிநல் குரவே தலை நல்லார்கண் பட்டவறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு1 என்பன பொது மறைத் திருமொழி “உயிர்” இரண்டும் ஆகுபெயராய் அவற்றது துன்பத்தைக் குறித்தன. வெஃகி- விரும்பி. அவி - அடப்படுவன. அடுநர்க்குச் சுவை பல பகர்தலாலது, ‘இதை இதை இன்று சமை, இப்படி. இப்படிச் சமை’ எனக் கட்டளையிடுதல். ஆரா உண்டி - வயிறு நிறையினும் சுவை மிகுதியால் மனம் நிறையாது அளவின்றி உண்ணும் உணவு. தூராக் குழி - தூர்க்கும் பொழுது தூர்ந்து விட்டது போலத் தோன்றிப் பின் வெறிதாகி, ஒரு நாளும் தூராதகுழி; வயிறு. பரா - பாராது இதனை, “கல்வியும்” என்பதன்பின்னர்க்கூட்டுக.
1 திருக்குறள் - 657, 408.
|