அகவற்பா | 871. | உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையற வுளவோ, அதனால் நெஞ்சப் புனத்துவஞ்சக் கட்டையை | | 5 | வேரற அகழ்ந்து போக்கித் தூர்வுசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற மெய்யெனும் எருவை விரித்(து)ஆங்(கு) ஐயமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று | | 10 | தடுக்குநர்க் கடங்கா(து) இடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக்(கு) அஞ்சியுட் சென்று சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் | | 15 | காமக் குரோதக் களையறக் களைந்து சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்(டு) அம்மெனக் கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து, புண்ணிய | | 20 | அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி காள கண்டமும் கண்ணொரு மூன்றும் தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்துமாய்ப் பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க் | | 25 | காணினுங் கேட்பினுக் கருதினுங் களிதரும் |
இல்லையேல் நமன் தமர் உன்னைக் கொடுபோய் நிரயத்து உந்தி வீழ்த்தி உழக்குவர்’என இயைத்து உரைக்க. வந்தி - வணங்கு; சந்தி - நேர்நின்று காண். தாம், அசை. உந்தி - பின்னின்று தள்ளி. உழக்குவர் - அலைப்பர். 871. குறிப்புரை: உழப்பு - முயற்சி. உறுதி - நன்மை. கழப்பு - நெடுநீர்மை; மடிகையறவு - துன்பம். “முயற்சி திருவினை யாக்கும்;
|