பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை640

கட்டளைக் கலித்துறை

873.

காணீர் கதியொன்றுங் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே.

12

அகவற்பா

874.

மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்(து)

5

இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை

முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்
றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்

10

கட்டிய நரம்பின் கயிறோ உடம்பினுள்

பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா(து)
இன்ன தியானென் றறியேன் தெரியா
ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன்,
முன்னம்

15

வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக்


873. குறிப்புரை: உருத்திர சாதனம் - உருத்திராக்கம். வீணீர் - பயனில்லாது திரிகின்றவர்களே. இதனை முதற்கண் வைத்து, ‘மருதப்பிரான் கழல் மேவுதற்கு உமக்கு எளிதோ! (அன்று; ஆதலால் நீவிர்) கதி என்றும் காணீர் - காணமாட்டீர்’ என்க. ‘செயற்பாலனவற்றைச் செய்கிலீர்; நீவிர் பயன் பெறுதல் எங்ஙனம்’ என்றபடி.

874. குறிப்புரை: ‘பதியியல்பைமட்டுமன்று; ஏனைப் பசு பாசங்களது இயல்பையும் உள்ளவாறு உணர்தல் திருவருள் வழியால் வரும் சிவஞானத்தாலன்றிக் கூடாது’ என்பதையும், ‘சிவஞானத்தால் அறிகின்றுழி, முன்னர்ப் பதியியல்பை உணருமாற்றானே ஏனைப் பசு பாசங்களது இயல்பும் உள்ளவாறு உணரப்படும்’ என்பதையும் இப்பாடல் இனிது விளக்குகிறது.