பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை654

கட்டளைக் கலித்துறை

882.

வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதன னம்புக்(கு)
இளையார் தனங்கண் டிரங்கிநில் லாரிப் பிறப்பினில்வந்(து)
அளையார் நரகினுக் கென்கட வார்பொன் னலர்ந்தகொன்றைத்
தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே.

21

அகவற்பா

883.

அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வம்
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையுங் கடந்த கடவுள்

5

உளக்கணுக் கல்லா ஊன்கணுக் கொளித்துத்(து)

துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது
உறுப்பில் நின்றெழுதரும் உள்ளத் தோசை
வைத்த நாவின் வழிமறுத் தகத்தே

10

தித்தித் தூறம் தெய்வத் தேறல்


செய்யும் செயலை வகுத்துக் கூறியதாம். பொருத - போர் செய்த. வனத்து ஆனை - காட்டு யானை. வளைந்து - வலம் வந்து.

882. குறிப்புரை: “பொன் அலர்ந்த” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. பொன் அலர்ந்த - பொன்போல மலர்ந்த. தளை - தளைக்கப்பட்டது; மாலை, வளைதல் - வலிமை யிழத்தல். ‘பசியின் வளையார்; பிணியின் வருந்தார்’ என மாற்றிக் கொள்க. தனம்- மகளிர் கொங்கை. இரங்குதல் - ஆற்றாது வருந்தல்,“பொழுதுகண்டிரங்கல்”1 என்றது காண்க. அளைதல் - உலகியலில் ஈடுபடுதல். என் கடவார் - என்ன கடமை யுடையாராவார்!‘ யாதொரு கடமையும் உடையவர் ஆகார்’ என்பதாம்.

883. குறிப்புரை: ‘செல்வம், சுடர், ஓசை, தேறல், நாற்றம், முளை’ - என்பன உருவகவகையால் திருவிடைமருதூர் இறைவனையே குறித்தனவாய், விளியேற்று நின்றன. “கொடுப்பினும் குறையாச் செல்வம், (திருவருள்) ஊன் கண்ணுக்கு ஒளித்து, உளக்கண்ணுக்கு விளங்கித் துளக்கற நிமிர்ந்த சுடர். இருசெவிக்கு எட்டாது


1. திருக்குறள்