| அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும் வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும் தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும் உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும் | 15 | ஏனமும் அன்னமும் எட்டா தலமர வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும் செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும் அழல்விழிக் குறளனை அமுக்கினை என்றும் இனையன இனையன எண்ணிலி கோடி | 20 | நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின் அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும் என்தன் வாயில் புன்மொழி கொண்டு நின்னை நோக்குவன் ஆதலின் என்னை | 25 | இடுக்கண் களையா அல்லல் படுத்தா(து) எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க அடித்துத் தட்டி எழுப்புவ போல நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத் துயிலின் நீங்கிப் பயிலும் வீதித் | 30 | திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன் நின்நினைந் தெறிந்த அதனால் அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே. | | 25 |
அளவதாயினும்’ என மாற்றிவைத்து உரைக்க. ‘ஆயினும் இயன்ற அளவு கொண்டு நின்னை நோக்குவன்’ என்க. நோக்குதல் மனத்தால். “கொண்டு” என்பது ஆன் உருபின் பொருள் படுவதோர் இடைச் சொல். என்னை அல்லற் படுத்தாது இடுக்கண்களையாய்’ என மாற்றியுரைத்து, அதன்பின் ‘ஏன்எனில்’ என்பது வருவித்து, ‘அவன்றனக்கும் நின் அருள் பிழைத்தின்றே’ எனமுடிக்க. ‘நின்’ என்பதின்றி வாளா ‘அருள்’ என்பது பாடம் அன்று “உறங்க” என்பதன்பின் ‘அம்மாடம்’ என்பது வருவிக்க. உகைத்தல் - பெயர்த்தல். “சுடர்”என்பதும் விளி. பொல்லாமை, சிவவேடம் புனையாதுபுத்த வேடத்தோடே யிருந்தமை.
|