| மாசறு சிறப்பின் வானவர் ஆடும் பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி அயிரா வணத்துறை ஆடும் அப்ப கயிலாய வாண கௌரி நாயக |
10 | நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும் மழைக்கவுட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும் அமரர்த் தாங்கும் குமர வேளும் |
15 | சுரிசங் கேந்திய திருநெடு மாலும்
வான்முறை படைத்த நான்முகத் தொருவனும் தாருகற் செற்ற வீரக் கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும் பீடுயர் தோற்றத்துக் கோடிஉருத் திரரும் |
20 | ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும் வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும் சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும் நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும் |
25 | வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் எட்டு நாகமும் அட்ட வசுக்களும் மூன்று கோடி ஆன்ற முனிவரும் வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும் தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும் |
30 | வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும் அத்தகு செல்வம் அவமதித் தருளிய சித்த மார்சிவ வாக்கிய தேவரும் (1)வெள்ளை நீறு மெய்யிற் கண்டு |
35 | கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் (2)ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப் பாடின என்று படாம்பல அளித்தும் (3)குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் தன்னை ஏத்தின என்று |
40 | காசும் பொன்னுங் கலந்து தூவியும் |