45 | (4)வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலும் அவன்அப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும் (5)மருத வட்டத் தொருதனிக் கிடந்த | 50 | தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்மித் தலையும் கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் (6)கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் | 55 | (7)காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் (8)விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும் | 60 | இனைய தன்மையர் எண்ணிறந் தோரே அனையவர் நிற்க யானும் ஒருவன் பக்தி என்பதோர் பாடும் இன்றிச் சுத்த னாய்இன்னுந் தோன்றாக் கடையேன், நின்னை | 65 | இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும் கருதி யிருப்பன் கண்டாய் பெரும நின்னுல கனைத்தினும் நன்மை தீமை ஆனவை நின்செய லாதலின் | | நானே அமையும் நலமில் வழிக்கே.
| | 28 |
ஈசன் எம்பெரு மான்இடைமருதினில் பூசம்நாம் புகுதும்புன லாடவே1 என அப்பரும் அருளிச் செய்தார். புரக்கும் - தன்னிடத்தில் வைத்துக் காக்கின்ற 'பொன்னி' என்க. 'பொன்னியது துறை' என ஆறாவது விரிக்க. 'அயிராவணத் துறை' என்பது பெயர். அயிராவணம், கயிலையில் உள்ள யானை. அஃது இரண்டாயிரம் தந்தங்களை
1. திருமுறை - 5.14.1.
|