122 | பணிந்தும், படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும், அணிந்தவரை ஏத்தத் - துணிந்தும் எந்தையார்க்(கு) ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு. | | 79 |
123. | செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள் அரக்கனையும் முன்னின்(று) அடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா(து) அரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால். | | 80 |
சிவன்எனும்நாமம் தனக்கே உடைய | செம்மேனிஎம்மான் | அவன்எனை ஆட்கொண் டளித்திடுமாயின் | அவன்றனை யான் | பவன்எனும் நாமம் பிடித்துத் திரிந்து | பன்னாள் அழைத்தாள் | இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று | எதிர்ப்படுமே.1 |
என்பது அப்பர் திருமொழி. உழப்பின் வாரா உறுதிகள் உளவோ! கழப்பின் வாராக் கையற வுளவோ!2 என்றார் பட்டினத்தடிகள். 122. அ. சொ. பொ.: “படர்சடையான் பாதங்கள்” என்பதை முதலிற் கொள்க. போது - பேரரும்பு. அணிதல் - அலங்கரித்தல். வினைக்கண் வந்த எண்ணும்மைகள் ஆட்செய் யும் வகைகளை எண்ணி நின்றது. கொல், அசை ஓகாரம் சிறப்பு. “சிந்தையார்” என உயர்த்தற்கண் அஃறிணை உயர் திணையாய் மயங்கிற்று. செருக்கு - பெருமிதம். அஃதாவது, “ஒருவரை மதியாது உறாமைகள் செய்தல்”.3 தமது பெருமிதத் தைத் தம் சிந்தைமேல் வைத்து, அதனை வேறுபோற் கூறினார். “சிவனுக்கு ஆட் செய்யப் பெறுகின்ற பேறு கிடைத்தற்கரியது’ என்பதைக் குறித்தவாறு. 123. அ. சொ. பொ.: “திருத் தக்க” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. திரு - திருமகள். ‘திருநாவுக்குத் தக்க’ என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. ‘திருவினால் தக்க’ என நான்காவது விரிப்பின்
1. திருமுறை - 4.112.9 2. 11ம் திருமுறை - திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 10 3. திருமுறை - 7.68.1.
|