| 972. | பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர் தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச் சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராவொருத்தல் பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே. | | 81 |
| 973. | கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும் வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர் விச்சா தரர்தொழு கின்ற விமானமுந் தன்மமறா அச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே. | | 82 |
| 974. | ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம் பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரிய வாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள் தாங்கின நாட்டிருந் தாள்அவர் தன்மனை ஆயிழையே. | | 83 |
972. குறிப்புரை: "பொலி நுதலாய்" என வந்தமையால் இப்பாட்டினைத் தலைவன் தலைவிக்குப் பதி பரிசு உரைத்த தாகவே கொள்க. பொலி - விளங்குகின்ற. பணை - வயல்கள். வயல்களில் பாசியும், நீர்ச் சேம்பும் அடர்ந்திருத்தல் வானத்தில் கருமுகில் படிந்தது போலக் காணப்படுகின்றது. கரா ஒருத்தல் - ஆண் முதலை. பொருதல் - தாக்குதல். 'பொருவதாக, அதனைப் பார்' என்க. 'கச்சியின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. 973. குறிப்புரை: "மகிழ் திரு ஏகம்பர் தேவி மகிழ" என்பதை முதலிற் கொள்க. 'ஏகம்பர் மலைமகளுக்கு அருள் புரிந்தது, - அவள் தம் தேவி - என்னும் அன்பு பற்றி' என்றற்கு, "தேவி மகிழ" என்றார். "மலைமகள்கண்" என்பதில் கண், ஏழனுருபு. ஆர - பொருந்த. 'வைத்தார்' என்பது எதுகை நோக்கி, "வைச்சார்" என மருவிற்று. 'விண்ணோரும், விச்சா தாரும் தொழுகின்ற அவள் விமானமும்' என்க. பரப்பு - நிலப் பரப்பு. ஆங்கு - அப்பரப்பின்மேல் மாடங்கள் - மேல் மாடங்கள். இதனால் கச்சிக் காமக் கோட்டத்தது சிறப்பு உணர்த்தப்பட்டது. 974. குறிப்புரை: ஊரகம் - உலகளந்த பெருமாள் கோயில். பாடகம் - பாண்டவ தூதப் பெருமான் கோயில், இவை கச்சியில் உள்ளவை. தெவ் - பகை; பகைவர்; அசுரர். இரிய - தோற்று ஓட கன்னி - துற்கை. மற்று அசை அவர் - மேலெல்லாம் சொல்லி வருகின்ற கம்பர். வான் கவிகள் - தெய்வப் புலவர்கள். தாங்கிய நாடு - உயர்ந்துக் கூறிய உலகம் அது சத்தி தத்துவ புவனம். அதில் இருந்தவள் சத்தி. "அரி" என்பதை "ஓங்கின" என்பதனோடும் கூட்டுக. 'அரி ஓங்கின (நின்ற கோலமாய் உள்ள) ஊரகம் (அவர்
|