பக்கம் எண் :

725திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

994.உருவாம் உலகுக் கொருவன் ஆகிய
பெரியோர் வடிவிற் பிறிதிங் கின்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
5முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்

தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஒங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும்

10பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்

திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின்

15உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர

பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழ்த்தின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.

3


தருவன் என்பது பற்றி "அவ்வவர்க்கு அவ்வவை யாகி" என்றார். அணங்கிய - துன்புற்ற அடை - அடையப்பட்ட பொருள். பளிங்கு தன்னால் அடையப்பட்ட பொருளின் தன்மையாய் நிற்றல்போல, 'இறைவன் தான் தனது அருள் காரணமாகத் துணையாய் அடையப்பட்டாரது கருத்திற்கேற்ற இயல்பினை உடையனாவன்' என்பதாம்.

பொன்மை நீலாதி வன்னம்

பொருந்திடப் பளிங்கு அவற்றின்

தன்மையாய் நிற்கு மாபோல்

என்றார் சிவஞான சித்தியிலும்1 இடத்து - இடப்பாகத்தில் உரு, இங்கு 'இயல்பு' என்னும் பொருட்டு.

994. குறிப்புரை: சிவபெருமான் செய்த வீரச் செயல்களாகப் புராணங்களில் சொல்லப்படுவன பல. அவை திரிபுரம் எரித்தது, தக்கன் வேள்வியில் எச்சனது தலையைத் தடிந்தது, இந்திரன்


1. சூ.2.68.