பக்கம் எண் :

729திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

997.தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யானென அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
5அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும்

பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்

10நாதன் நானென நவிற்று மாறே

மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யானென மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யானென உணர்த்திய வாறே

15நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்

உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருநற் பூதப் படையோய் என்றும்
தெருளநின் றுலகினில் தெருட்டு மாறே
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்

20ஒங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத்

தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையின் சுழலும் மாந்தர்க்(கு)
ஆதி ஆகிய அறுதொழி லாளர்
ஒதல் ஒவா ஒற்றி யூர

25சிறுவர்தம் செய்கையிற் படுத்து

முறுவலித் திருத்திநீ முகம்படு மளவே.

6


997. குறிப்புரை: முதற்கண் 'நீ' என்னும் தோன்றா யெழுவாய் வருவித்துக் கொள்க.

நீ சடைமிசைத் தூமதி சூடுதல், 'யான் தூநெறியை உணரும் அறிவு வடிவானவன்' என்பதைக் குறிக்கும் குறிப்பாம்.

நீ அறக்கடவுளாகிய ஆன் ஏறு (இடபம்) ஊர்தல், அறத்தின்வழி உலகை நடாத்தும் முதல்வன் யான்' என அறிவிக்கும் குறிப்பாம்.