பக்கம் எண் :

737திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

1000.ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
5ஆவலித் தழுதல் அகன்ற அம்மனை

கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்
பிரித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்க்கும் குழவிய தியல்பின்
அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்

10மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கு

தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்

15கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது

எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையுந் தாயுஞ் சாதியும் அறிவும்

20சிந்தையுந் திருவுஞ் செல்கதித் திறனும்

துன்பமுந் துறவுந் தூய்மையும் அறனும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவைஒளி ஊறோசை நாற்றத் தோற்றமும்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்

25ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து

நின்றனன் தமியேன் நின்னடி அல்லது
சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விட மதனைத் திறப்பட நாடி
எய்துதற் கரியோய் யானினிச்

30செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.

9


1000. குறிப்புரை: பொருட்டு - நிமித்தம். 'பொருட்டாக' என ஆக்கம் வருவிக்க. இன்னாமை - துன்பம்; செவிக்குத் துன்பமாகுவன. புன்மை - சிறப்பிலாப் பொருள்களை யுடைமை. நீர்மை - தன்மை.