கட்டளைக் கலித்துறை 1011. | நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத் தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே காரண னேயெம் கணபதி யேநற் கரிவதனா ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே. | | 10 |
வெண்பா 1012. | அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின் எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய் கொங்கெழுதார் ஐங்கரத்த கோ. | | 11 |
அசுரர். "நம்பர்" என்பது சிவபெருமானைக் குறித்து இரு முறையாற் கூறப்பட்டது. மகன் - மகவான்; இந்திரன். சிவபெருமான் இந்திரனைத் தோள் நெரித்தமை மேல், "மகத்தினில் வானவர்" என்னும் பாட்டிலும் சொல்லப் பட்டது. 'நாம் நீக்கி அலை தருவானன்றே' என இயைக்க. வனம் - காடு. உருவகம், 'வினையாகிய வனம்' என வருதல் பெரும்பான்மைத்தாயினும் சிறுபான்மை 'வனமாகிய வினை' என வருதலும் உண்டு என்பதைத் தொல்காப்பிய உவம இயலில் கண்டுணர்க. 'வனமாகிய வல்வினை சாய, அதனானே அவற்றால் வரும் நோயை (துன்பத்தை) நீக்கி' என்க. வனசத்தன் - தாமரை மலரில் உள்ளவன்; பிரமன், அவனது அம் - அழகு; அழகிய எழுத்து. இனி, 'அழகாவது அவனது திறல்' எனினும் ஆம். திறலாவது இங்குப் படைக்கும் திறன். இதனையடுத்து நின்ற 'சாய' என்பதில் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது. அலை - அலைத்தலை; அழித்தலை. 'நாம் இனி வினைகாரணமாகப் பிரமனால் படைக்கப்படுதலை ஒழிக்கும் நிலைமை நமக்குத் தருவான்' என்பதாம். "நம்பர்மகன்" இரண்டிலும் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது. 1011. குறிப்புரை: 'ஏத்த நின்று மன்னு சிவன்' என்க. எல்லை நடாவிய அத்தேர் அணவும் - நாற்பாங்கு எல்லை யளவும் நடத்தப்படுகின்ற தேர் பொருந்திய. காரணன் - எப் பொருட்கும் காரணன். கரி வதனன் - யானைமுகன். என்பவர் - என்று துதிப்பவர். இப்பாட்டின் முதலாகிய "நாரணன்" என்பது முன்பாட்டு இறுதியில் உள்ள "நாரையூர்" என்பதை ஓராற்றால் அந்தாதியாகக் கொண்டதாம். 1012. குறிப்புரை: "ஈண்டு உழவர்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ஈண்டு - நெருங்கிய. நெல் அல்களை - நெற்
|