பக்கம் எண் :

749திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை

மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநம் சிந்தையமர் வான்.

17

கட்டளைக் கலித்துறை

1019.அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேரவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேயெனநின்(று)
அமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.

18

வெண்பா

1020.அவமதியா துள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.

19


இருத்தல் கூறப்பட்டது. மாங்கனி இடப்புறக் கீழ்க்கை. கொம்பு - தந்தம்; வலப்புறக் கீழ்க்கை. அண்டம் - ஆகாயம்; தும்பிக்கை; 'ஆகாயத்தைத் தடவுகின்றது' என்றபடி. பாசம் இடப்புற மேற் கை. "மழு" என்பது 'படைக்கலம்' எனப் பொருள் தந்து, அங்குசத்தைக் குறித்தது. வலப்புற மேற்கை. மல்குதல் - நிறைதல். "மல்குவித்தான்" என்பது வினைப் பெயர். ஆம் அசை, கனி சிந்தை வினைத்தொகை. அமர்வான் - விரும்புவான். "நம் சிந்தை அமர்வான்" என்பது, 'புலி கொல் யானை' என்பதுபோலத் தடுமாறு தொழிற்பெயர்.

1019. குறிப்புரை: அமரா - தேவனே. குமரன் - பிள்ளை. சரண் - பாதம். குமரற்கு முன்னவன் - முருகனுக்குத் தமையன். தமர் - சுற்றத்தார். ஆசு - குற்றம்; அவுணர் தமராகிய ஆசு' என்க. அவுணர், இங்கு முப்புரத்து அசுரர். "என நின்று அமரர் மனத்தவர்" என்பதை 'என அமர்ந்து நில்லாதவர்' என மாற்றிக் கொள்க. அமர்தல் - விரும்புதல். 'என' என் எச்சத்தால், 'துதித்து நில்லாதவர்' எனக் கொள்க.

1020. குறிப்புரை: "உள்ளமே" என்பதை முதலிற் கூட்டுக. தவ மதி - தவத்தால் உண்டாகிய ஞானம். தவமானவன, சரியை கிரியா யோகங்கள். சதுர்த்தோம் - பெருமை பெற்றோம். நவ மதியாம் கொம்பு - புதிதாகத் தோன்றுகின்ற பிறைபோலும் தந்தம். நம்பன் - சிவபெருமான். சிறுவன் - மகன் "அவமதி யாது" என்பது, முன்பாட்டில், "மனத்தவர்" என்ற அந்தத்தை ஆதியாகக் கொண்டதாம்.