1042. | வேடனென் றாள்;வில் விசயற்கு வெங்கணை யன்றளித்த கோடனென் றாள்;குழைக் காதனென் றாள்இடக் காதிலிட்ட தோடனென் றாள்;தொகு சீர்த்தில்லை யம்பலத் தாடுகின்ற சேடனென் றாள்;மங்கை யங்கைச் சரிவளை சிந்தினவே. | | 21 |
1043. | சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள் வந்திக் கவும்மனம் வாய்கர மென்னும் வழிகள்பெற்றுஞ் சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை யம்பலத்துள் அந்திக் கமர்திரு மேனியெம் மான்ற னருள்பெறவே. | | 22 |
1044. | அருள்தரு சீர்த்தில்லை யம்பலத் தான்தன் அருளினன்றிப் பொருள்தரு வானத் தரசாத லிற்,புழு வாதல்நன்றாம்; சுருள்தரு செஞ்சடை யோனரு ளேல்,துற விக்குநன்றாம், இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே. | | 23 |
"செய்வான்" என எதிர்காலத்தாற் கூறினார். காவு - கா; சோலை. வாய்ப்புனல் ஆட்டிய வேடுவன், கண்ணப்ப நாயனார் என்பது வெளிப்படை. 1042. குறிப்புரை: இப்பாட்டு தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது. கோடன் - கோஷன். ஆரவாரத்தையுடையவன். ஆரவாரம் - போர்காரணமாக எழுந்தது. சேடன் - பெருமையுடையவன். 'அவ்வளை, கைவளை' எனத் தனித்தனி. இயைக்க. அம் - அழகு. அது 'வளை' என்பதனோடு புணருங்கால் ஈறுகெட்டு லகர ஒற்று மிக்கது. சரி - வளையல்களில் ஒருவகை. "மங்கை" என்பதன்பின், 'அதுபொழுது' என்பது வருவிக்க. இவ்வாற்றால், 'இவளது வேறுபாட்டிற்குக் காரணம் தில்லைக் கூத்தினைக் காதலித்த காதலே' என்பதைக் குறிப்பால் உணர்த்தினாளாம். 1043. குறிப்புரை: 'சிந்திக்க மனம், உரையாட வாய், மலரால் கழல்கள் வந்திக்கக் கரம்' - என நிரல்நிறையாக இயைத்துக் கொள்க. சந்தித்தல் - சென்று அடைதல். தெண்ணர் - அறிவிலிகள். அமர் - ஒத்த; உவம உருபு. 1044. குறிப்புரை: அருளின் அன்றி - அருள்வழியாக அல்லாமல் பிறவாற்றால். அருளேல் - அருள் வழியாக வருமாயின் துறவிக்குப் புழுவாதலும் நன்றாம், நரகத்து வீழும் இருஞ் சிறையும் நன்றாம்' என்க. "நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறில், இறைவா"1 என மாணிக்க வாசகரும் அருளிச்செய்தார்.
1. திருவாசகம் - திருச்சதகம்.
|