பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை78

141.

அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை
அழகால் அழல்சிவந்த வாறே? - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு. 

98

142

செப்பேந் திளமுலையாள் காணவோ ? தீப்படுகாட்(டு)
அப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடும் நடம். 

99

143.

நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொருமேறோ ? ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ(று)
உருமேறோ ஒன்றா உரை. 

100


141. அ. சொ. பொ.: அங்கை- அகங்கை. ஆறு - பயன். தீ ஆடுவாய் - தீயின்கண் நின்றுஆடுவாய்; விளி. அகங்கையும், தீயும் அழகால் ஒன்றனைஒன்று விஞ்சுவனவாய் உள்ளன’ எனக் கூறி, அகங்கையின்மிக்க அழகைப் புகழ்ந்தவாறு. இஃது ஏது அணியின்பாற்படும்.

142. அ. சொ. பொ.: “தான்அங்காந்து” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. செப்புஏந்து- கிண்ணம்போல நிமிர்ந்த. “கணமவை” என்பதில்அவை, பகுதிப் பொருள் விகுதி. பின் வந்த, “காணவோ”என்பதன்பின், ‘நிகழ்கின்றது’ என்னும் பயனிலைஅவாய் நிலையாக எஞ்சி நின்றது. ‘நடம் நிகழ்கின்றது’ என இயையும். ‘எனக்கு ஒன்றாகச் செப்பு’என்க. ஒன்றாக - திட்டமாக - இனி, “நீ ஆடும்” எனஎழுவாய் வருவிக்க. முடிப்பினும் ஆம். ‘எவர்’ காணுதற்பொருட்டும் நீ ஆடவில்லை; உனது கருணை காரணமாகவே நீஆடுகின்றாய்’ என்பது குறிப்பு.

“ஆடும் எனவும், அருங்கூற்றம்உதைத்து வேதம்
பாடும் எனவும் . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . .
நாடும் திறத்தார்க்(கு) அருளல்லது நாட்ட லாமே?1

என அருளிச் செய்தமை காண்க. அங்காத்தல்- வாய் திறத்தல். ஐவாய - ஐந்து வாய்களை உடைய. நாகத்தாய்- பாம்பை அணிந்தவனே.

143. அ. சொ. பொ.: ‘பொன் ஒப்பாய்,நின் ஏறு நடக்கில்’ எனக் கூட்டி உரைக்க. படி - பூமி.நோக்கில் - கண் விழித்துப் பார்த்தால்.


1. திருமுறை - 3.54.6