நூல் தில்லைவாழந்தணர் 1093. | செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர் ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரி னூரெரித்த அப்பர்க்(கு) அமுதத் திருநடர்க்(கு) அந்திப் பிறையணிந்த துப்பர்க்(கு) உரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே | | 1 |
திருநீலகண்ட நாயனார் 1094. | சொல்லச் சிவன்திரு வாணைதன் தூமொழி தோள்நசையை ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்னுமை கோனருளால் |
திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தோடு ஒத்த அருளாசிரியத் திருமொழியாகக் கொண்டே திருத்தொண்டர் வரலாற்று விரியைத் தாம் அருளிச் செய்தார்' - என்பதை, அந்த மெய்ப்பதி கத்துஅடி யார்களை நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி புந்தி யாரப் புகன்ற வகையினால் வந்த வாறு வழாமல் இயம்புவாம்1 எனக் கூறியவாற்றால் அறிகின்றோம். 'நாதன்' என்பது அருளாசிரியரைக் குறிக்கும் சொல். இதன்கண் சேக்கிழார், "புந்தி ஆரப் புகன்ற வகை" - என்றதன்றி, 'விநாயகர் சொல்லிய வகைப்படி' எனக் கூறாமை நோக்கத் தக்கது. வகை நூலாகிய இதன் விரியே திருத்தொண்டர் புராணம் ஆகலின், இவ்வந்தாதிப் பாடல்களின் விரி பொருள் அப்புராணத்திலே காணத் தக்கது. இங்கு அவற்றைத் தந்துரைத்தல் மிகையாகும். 1093. குறிப்புரை: புவனங்கள் மூன்றினும் ஒப்ப உம்பரின் ஊர் - மூவுலகங்களிலும் ஒருபடித்தாக மேலே திரிந்த ஊர்கள்; திரிபுரம். அமுதத் - திருநடம் - அமுதம்போல இறப்பினை நீக்கிப் பேரானந்தத்தைத் தருகின்ற நடனம். நடர் - நடன மாடுபவர். துப்பர் - தூயவர். உரிமைத் தொழில் - அகம்படித் தொண்டு; அணுக்கத் தொண்டு; வழிபாடு. சொல்லுதும் - துதிப்போம். 1094. குறிப்புரை: 'சிவன் திரு ஆணை சொல்ல' எனக் கூட்டுக. சிவன் ஆணை - சிவன்மேல் ஆணை. 'தூய மொழியினையுடையாள்'
1. பெரிய புராணம் - திருமலைச் சிறப்பு - 39.
|