| வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான் தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே. | | 2 |
இயற்பகை நாயனார் 1095. | செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன்தவனாய்க் கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே மைதிகழ் கண்ணியை யீந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந் தெய்திய காவிரிப் பூம்பட்டினத்துள் இயற்பகையே. | | 3 |
இளையான்குடிமாற நாயனார் 1096. | இயலா விடைச் சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த வயலார் முளைவித்து வாரிமனையலக் கால்வறுத்துச் செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க் கயலார் இளையான் குடியுடை மாறனெங் கற்பகமே. | | 4 |
மெய்ப்பொருள் நாயனார் 1097. | கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தால் செற்றவன் தன்னை யவனைச் செறப்புக லுந்திருவாய் |
என்னும் பொருட்டாகிய "தூமொழி" என்பது "துணைவி" என்னும் பொருட்டாய் நின்றது. நசை - விருப்பம். ஒல்லை - விரைவாக; அப்பொழுதே. 1095. குறிப்புரை: செய் தவர் - தவம் செய்பவர்; சிவனடியார்கள் கொடுப்ப - கொடுத்துவரும் நாட்களில் கைதவம் - வஞ்சனை; தூர்த்தர் பேசுவது போலப் பேசியது. "காவிரிபூம்பட்டினம்" என்றதனானே 'வணிகர்' என்பது பெறப்படும் என்பது கருத்து. 1096. குறிப்புரை: இயலா இடை - யாதும் செய்ய இயலாத காலம். அது வறுமை நிலையும் பாதி இரவும், மழைப் பெயலும் ஆகிய காலம். மாதவன் - சிவனடியான். வித்து - விதை. மனை அலக்கு - வீட்டுக் கூரையாயிருந்த கழிகள். செயல் ஆர் பயிர் - வீட்டுப் புழைக்கடையில் அப்பொழுது தான் சிறிதே வளர்ந்த கீரைப்பயிர். விழு - விழுப்பம்; மேன்மை. தீ - இனிமை; இளையான்குடி, ஊர். இஃது எந்த நாட்டில் உள்ளது என்பது துணியப்படவில்லை. 1097. குறிப்புரை: 'தன்னைக் காய் சினத்தால் செற்றவன் நன் மெயத்தவன் போல் ஒரு பொய்த்தவன். அவனை எனக் கூட்டுக.
|