பக்கம் எண் :

793திருத்தொண்டர் திருவந்தாதி

முருக நாயனார்

1110.பதிகந் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்
மதியஞ் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து
துதியங் கழல்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டனம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு கன்னெனும் அந்தணனே.

18

உருத்திர பசுபதி நாயனார்

1111.அந்தாழ் புனல்தன்னி லல்லும் பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொடு ருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
பைந்தா ருருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூரென் றுரைப்பரிந் நானிலத்தே.

19

திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)

1112.நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே.

20

திருக்குறிப்புத்தொண்ட நாயனார்

1113.மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவனென்னா

1110. குறிப்புரை: பதிகம் - திருமுறைத் திருப்பதிகங்கள். பதிகத்தில் திகழ்தரு பஞ்சாக்கரம் என்க. மலர் தொட்டு - பூக்களை மாலையாகத் தொடுத்து. சண்பை நாதன், திருஞான சம்பந்தர். வன்றொண்டன், சுந்தர மூர்த்தி நாயனார், இவர் திருப்புகலூரில் பொன் பெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்துட் காண்க.

1111. குறிப்புரை: அம் - அழகிய. தாழ்புனல் - ஆழமான நீர். ஆகுரம் - விருப்பம்; உந்தாத - வெளிப்போக்காத. உருத்திரம் - சீருத்திரம். இஃது எசுர் வேதத்தின் ஒரு பகுதியாய் உள்ளது. இன்றும் சிவாலயங்களில் சிறப்பாக ஓதப்பட்டு வருவது. வயற்கு - வயல்களில். நந்து ஆர் - சங்குகள் நிறைந்த.

1112. குறிப்புரை: புறம் - நான்கு வருணங்கட்கும் புறமான சாதி. அதனால் கோயில்களிலும் புறத்தே நிற்பவர். புன்புலை - கீழான புலைச் சாதியில் பிறந்த உடம்பு. "போய்" என்பதை, 'போக' எனத் திரிக்க. பதி - ஊர்.

1113. குறிப்புரை: மண்டும் - நிறைந்த. தமர் - அடியார். தூசு - ஆடை. ஏற்றுதல் - அழுக்குப்போகத் துவைத்தல். வாட்டும் வகை -