| படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி அடிமன்ன வைத்த பிரான்மூல னாகின்ற வங்கணனே. | | 36 | தண்டியடிகள் நாயனார் 1129. | கண்ணார் மணியொன்று மின்றிக் கயிறுபிடித்தரற்குத் தண்ணார் புனல்தடம் தொட்டலுந் தன்னை நகுமமணர் கண்ணாங் கிழப்ப வமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண் விண்ணா யகனிடைப் பெற்றவ னாரூர் விறல்தண்டியே. | | 37 | மூர்க்க நாயனார் 1130. | தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன்தகுகவற்றால் கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள் முண்டநல் நீற்ற னடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர் நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே. | | 38 | சோமாசிமாற நாயனார் 1131. | சூதப்பொழி லம்ப ரந்தணன் சோமாசி மாறனென்பான் வேதப் பொருளஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான் நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும் மாதுக்குக் காந்தன்வன் றொண்டன் தனக்கு மகிழ்துணையே. | | 39 |
அசை. அம்கணன் - அழகிய கண்களை யுடையவன். கண்ணுக்கு அழகு கருணை. 1129. குறிப்புரை: "ஒன்றும்" என்னும் உம்மை இழிவு சிறப்பு. 'தொடலும்' என்பது விரித்தல் பெற்றது. தொடுதல் - தோண்டுதல். இந்நாயனாரது மரபும் அறியப்படவில்லை. 1130. குறிப்புரை: திருவேற்காடு, தொண்டைநாட்டுத் தலம். கவறு - சூதாடு கருவி. வல் ஆயம் - வலிய தொகை; பந்தயக் zகணக்கு. நண்டு அலை நீர் - நண்டுகள் உலாவுகின்ற நீர். குடத்தை, இப்பொழுது 'கும்பகோணம்' என வழங்குகின்றது. இந்நாயனார் இறுதியில் அங்குச் சென்று தங்கினார். 1131. குறிப்புரை: சூதம் - மாமரம். அம்பர், அம்பர் மாகாளம்; சோழநாட்டுத் தலம். 'மாறன்' என்பது இயற்பெயர். 'சோமாசி' என்பது சிறப்புப் பெயர். 'சோம யாஜி' என்பது 'சோமாசி' எனத்
|