பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை802

சிறப்புலி நாயனார்

1134.புவனியில் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித்தெ னாக்கூ ரதிப னருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே.

42

சிறுத்தொண்ட நாயனார்

1135.புலியி னதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வ னுடல்துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழிலொண்செங் காட்டங் குடியவர் மன்னவனே.

43

சேரமான்பெருமாள் நாயனார்

1136.மன்னர் பிரானெதிர் வண்ணா னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி வானெனும் சேரலனே.

44


1134. குறிப்புரை: பூதி - விபூதி; திருநீறு. சாதனம் - உருத்திராக்கம்; இது சைவ மரபுப் பெயர். "ஆர்ந்து" என்பதை 'ஆர' எனத் திரிக்க. தவ நியமம் - தவமாகிய, தப்பாக்கடமை. இஃது இங்கு சைவாசாரத்தின்மேல் நின்றது. சிறப்பு, மேல்நிலையில் வைத்து வழிபடுதல். தத்துவம் - மெய்ம்மை; அஃதாவது, உளமார நேர்ந்து செய்தல். காரணன் - செய்பவன்; கருத்தா. தலை நிற்றல் - பற்றி நிற்றல். 'சிறப்புலி' - என்பது பெயர்.

1135. குறிப்புரை: கலி, பிள்ளைக்கலி. அதைத் தொலைத்தமை, கறியாகச் சமைக்கப்பட்ட மகன் திருவருளால் மீண்டும் முன்போல உயிர்பெற்று எழுந்து வரப் பெற்றமை. கண்டீர், முன்னிலையசை. "தனது புதல்வன்" என்பதற்கு, மேல்1 "நினது அடியேம்" என்றதற்கு உரைத்ததை உரைக்க.

1136. குறிப்புரை: 'மன்னர்பிரான், தென்னர்பிரான், சேரலன்' என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள். உவர் - உவர் மண். ஊறி - ஊறியதனால். நீறு - திருநீறு. தன்னர்பிரான் தமர் போல - தம்மைப் போல்பவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானுக்குத் தொண்டராயினார்போல. என்னர்பிரான் - என்போன்ற குடி


1. பாட்டு - 35.