பூசலார் நாயனார் 1170. | பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையான் கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா ததுமனத் தேயெல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர் புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனிற் பூசலையே. | | 78 |
மங்கையர்க்கரசியார் 1171. | பூச லயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால் வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர் தேசம் விளங்கத் தமிழா கரர்க்கறி வித்தவரால் நாசம் விளைத்தா ளருகந் தருக்குத்தென் னாட்டகத்தே. | | 79 |
நேச நாயனார் 1172. | நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந் தாட்டரிக் கப்பெற் றவனென்பர் சைவத் தவரரையில் கூட்டுமக் கப்படம் கோவணம் நெய்து கொடுத்துநன்மை ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே. | | 80 |
1170.குறிப்புரை: கதுமென - விரைவாக, எல்லி - இரவு. இரவு உறங்காமை கூறவே, பகல் உறங்காமை சொல்ல வேண்டாவாயிற்று. 'அருள்பெற்றது நினைந்து' என மாற்றிக் கொள்க. எழுவாய் தொழிற்பெயராய வழி பயனிலை வினையெச்சமாய் வருதல் உண்டு. என்பர் - என்று புகழ்வர். 1171.குறிப்புரை: பூசல் அயில் தென்னனார் - போரை வெல்லும் வேற்படையையுடைய பாண்டியர். "தென்னவனார்" எனக் குடிப்பெயர் ஈற்று 'அன்'னின் முன்னும், 'ஆர்' விகுதி வந்தது. அனல் - சமணர் திருஞான சம்பந்தரது திருமடத்தில் இட்ட. ஆக - வந்து பற்ற. 'அவர் (பாண்டியர்) பொறாமை யினால்' என்க. "கண்டீர்" என்னும் முன்னிலை அசையை, "நாசம் விளைத்தாள்" என்பதன் பின்னர்க் கூட்டி முடிக்க. தமிழாகரர் - திருஞானசம்பந்தர். 1172.குறிப்புரை: நாட்டம் - கண். இட்டு - மலராக இட்டு. அரி - திருமால். வந்திப்ப - வழிபட. வெல்படை, இங்குச் சக்கரம். தாள் தரிக்கப்பெற்றவன் - திருவடியைத் தலையிலே சூட்டிக் கொள்ளப்பெற்றவன். சைவத்தவர் - சைவ சந்நியாசிகள். அக்கம் + படம் = அக்கப்படம். அக்கம் - கண். படம் - துணி. அக்கப்படம் - கண் போலக் காக்கும் துணி; என்றது கீளினை. நன்மையாவது சிவ
|