திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் 1175. | தனையொப் பருமெருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன் நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள் சினையொப் பலர்பொழில் சண்பையர் கோன்செந் தமிழொடிசை புனையப் பரனருள் பெற்றவ னென்பரிப் பூதலத்தே. | | 83 |
சடைய நாயனார் 1176. | தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையனென்னுங் குலம்விளங் கும்புக ழோனையுரைப்பர் குவலயத்தில் நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின் பலம்விளங் கும்படி யாரூ ரனைமுன் பயந்தமையே. | | 84 |
இசைஞானியார் 1177. | பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக் கயந்தா னுகைத்தநற் காளையை யென்றுங் கபாலங்கைக்கொண் | | |
1175.குறிப்புரை: 'நினைய' என்பதன் இறுதி நிலை தொகுக்கப்பட்டது. சினை - கிளை. 'சினை ஒப்ப' என்பதில் "ஒப்ப" என்பதும் அவ்வாறு நின்றது. ஒப்ப அலர்தல் - யாவும் ஒன்றுபோல மலர்களைப் பூத்தல். சண்பை - சீகாழி. சண்பையர் கோன், திருஞான சம்பந்தர். 'அவரது செந்தமிழோடு' என்க. 1176. குறிப்புரை: முதற்கண் உள்ள "விளங்கும்" என்னும் பெயரெச்சம், "திருநாவலூர்" என்னும் ஏதுப்பெயர் கொண்டது. உரைப்பர் - புகழ்வர். ஆரூரன், நம்பியாரூரன். சுந்தர மூர்த்தி நாயனார். 'பயந்தமை சொல்லி' என ஒருசொல் வருவித்து, "உரைப்பர்" என்பதனோடு முடிக்க. குவலயம் - நில வட்டம். அதன் நலமாவது, முற்செய் தவத்தோரும் அதன் பயனைப் பெற நிற்பது. "நாம்" என்றது தம்மையும் உளப் படுத்துச் சிவனடியார்களை. பலம் - பயன். நற்றவத்தின் பயன் அடியார் பெருமையை அறிதல். அதனை அறிதலானே மக்கள் மக்களாய் விளங்குவர் ஆதலின் அது பற்றியே "நாம் விளங்கும்படி" என்றார். 'இவையெல்லாம் நம்பியாரூரர் திருநாவலூரில் சடையனார்பால் அவதரித்துத் திருத்தொண்டத் தொகையை அருளிச்செய்தமையாலே' என்றபடி. 1177.குறிப்புரை: 'வெள்ளைக் கயந்தான் உகைத்த நற்காளையைப் பயந்தாள்' என்றும், 'அரன் புனிதனவன் திருத்தாள்
|