நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த 34. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி திருச்சிற்றம்பலம் கட்டளைக் கலித்துறை 1182. | பார்மண் டலத்தினிற் பன்னிரு பேரொடு மன்னிநின்ற நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே. | | 1 | 1183. | பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக் கோன்பயந்த மதியத் திருநுதல் பங்க னருள்பெற வைத்தஎங்கள் நிதியைப் பிரமா புரநகர் மன்னனை யென்னுடைய கதியைக் கருதவல் லோரம ராவதி காவலரே. | | 2 |
1182. குறிப்புரை: ஆளுடைய பிள்ளையார், திருஞான சம்பந்தர். பார் மண்டலம் - நில வட்டம். சீகாழியின் பன்னிரு பெயர்களாவன, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை, கழுமலம்' - என்பன. இவைகளைத் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களால் அறிக. படப்பை - தோட்டம். கார் மண்டலக் கண்டம் - கறுத்த வட்டத்தையுடைய கழுத்து. தார் மண்டலம் - மார்பிலணியும் மாலை வட்டம். மேவிய - அவதரித்த. பதி - நகரம் எண்தோளன் கருணை பெற்ற சம்பந்தன் மேவிய தண்பதி பிரமபுரம்' என முடிக்க. எண்தோளன் - சிவபெருமான். 1183. குறிப்புரை: பெருவழி, பல சிறுவழிகள் வந்து (குறுகிய தூர வழிகள்) வந்து சேரும் நெடுந்தூர வழி சமயத் துறையில் பெருவழி, சைவம் பிற சமயங்கள் யாவும் அதனுள் அடங்கும்.
| ஓதுசமயங்கள், பொருள் உணரும் நூல்கள் | | ஒன்றோ டொன்று ஒவ்வாமல் உளபலவும்; | | யாது சமயம்? பொருள்நூல் யாது இங்கு? என்னில், இவற்றுள் | | இது ஆகும்; இது அல்லது; எனும் பிணக்கது இன்றி, | | நீதியினால், இவையாவும் ஓரிடத்தே காண | | நின்றது யாது, அதுசமயம், பொருள் நூல்; |
|