பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை836

1199.கைம்மையி னால்நின் கழல்பர வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம் நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங் கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி யோ!சொல்லு சம்பந்தனே.

18

1200.பந்தார் அணிவிரற் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்
 

'காரிகையே! விலைக்கு உள்ளது (நீ விற்பது) கடலினின்றும் வாரிய கயலோ? அல்லது (உனது முகத்தில்) காதளவும் சென்று மிளிர்கின்ற கயலோ? (ஏது?) சொல்லு' என 'மீன் விற்கின்ற நீ உன் கண்ணால் என்னை வாட்டுகின்றாய்' என்பதாம். நாதன் நனி பள்ளி நகர் - சிவபெருமானது 'திருநனி பள்ளி' என்னும் தலம். "சூழ்" என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய், அத்தொழிலையுடைய இடத்தைக் குறித்தது. 'முன்பு கானகம் ஆக்கிப் பின்பு அதனையே வயல் ஆக்கிய கோன்' - என்க. 'கானகம்' என்பது முல்லை நிலமும், 'வயல்' என்பது மருத நிலமும் ஆவன ஆயினும் அவை சிறு பான்மை பற்றி ஓதப்பட்டனவேயாகும். ஏனெனில், இது பாலை நெய்தல் பாடியதாகவே பிற இடங்களிலும் சொல்லப்படுதலாலும், இவ் ஆசிரியர்தாமே,

நனிபள்ளியது - பாலைதனை
நெய்தல் ஆக்கியும்1

எனக் கூறுதலால் என்க. மேதை - புகலிக் கடல் - சீகாழி யைச் சார்ந்து நிற்கும் கடல்.

1199. குறிப்புரை: கைம்மை - சிறுமை, இஃது இப்பொருட்டாயின் பரவாமைக்குக் காரணமாகும். இவ்வாறன்றி, 'கைம்மை - கைத்தொண்டு' எனின், அது 'கைத்தொண்டினால் பரவுதலைச் செய்யாமை' எனப் பரவுதலின் வகையைக் குறிக்கும். வன்மையன் - வல்லமை யுடையவன்; அஃதாவது, 'வீடு பேற்றைப் பெற வல்லவன்' என்பதாம். விழுப்பம் - மேன்மை. "திறன் அறிந்து தீதின்றி வந்த பொருள் அறம், இன்பம் இரண்டையும்தரும்2 ஆதலின், "விழுப் பொருள்" எனப்பட்டது. ஓடு, எண்ணிடைச் சொல்.

1200. குறிப்புரை: இப்பாட்டு, குறிஞ்சித் திணையில் 'வறுங்களம் நாடி மறுகல்' - என்னும் துறையது. அஃதாவது தலைவியைத் தமர்


1. ஆளுடைய பிள்ளையார் திருஉலா மாலை - கண்ணி - 75, 76.
2. திருக்குறள் - 754.