1202. | கடலன்ன பொய்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத் திடநம னேவுதற் கெவ்விடத் தானிருஞ் செந்தமிழால் திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன்செந் தாமரையின் வடமன்னு நீள்முடி யானடிப் போதவை வாழ்த்தினமே. | | 21 | 1203. | வாழ்த்துவ தெம்பர மேயாகும், அந்தத்து வையமுந்நீர் ஆழ்த்திய காலத்து மாழா தது,வரன் சேவடியே ஏத்திய ஞானசம் பந்தற் கிடமிசைத் தும்பிகொம்பர்க் காத்திகழ் கேதகம், போதக மீனுங் கழுமலமே. | | 22 | 1204. | மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி நீண்முடி வண்கமலப் பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவரென்னத் |
வரிசை. இன், உவமப் பொருள்கண் வந்த ஐந்தன் உருபு. "நுரை கொண்டு" - என்பதைத் "திரைகொண்டு" என்பதன் பின்னர்க் கூட்டுக. மெய் - உடம்பு. பரம் - சுமை. 'உடற் சுமையோடு உள்ளம் சுழல நொந்தோர்' என்க. 'சுமையோடு' என்பது, 'சுமையாக' அதனுடன் என்றவாறு.நோதல், தனிமையினால், கூடினார்க்கு இனியதாகின்ற இரவு இன்னாது ஆதல் பிரிந்தோர்க்கே யாதலின் கடல் வருத்தம் செய்யும் இராக் காலத்தை "நொந்தோர் இரவு" - என அவர்க்கே உரித்தாக்கினாள். ஞாலம் செறி கடல் - நிலத்தை உள்ளடக்கிய கடல். 1202. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை. வடம் - மாலை. தாமரை மலர் மாலை அந்தணர்களுக்கு அடையாள மாலையாகும். 1203. குறிப்புரை: 'கழுமலத்தையே வாழ்த்துதல் எம் பரமே யாகும்' என வினை முடிக்க. பரம் - கடமை. அந்தம் - யுக முடிவு. முந்நீர் - கடலில் உள்ள மூன்று நீர். (ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்). 'நீர் - நீர்மை' எனக் கொண்டு, "படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தன்மைகளை யுடைய கடல்" என்பர் நச்சினார்க்கினியர். 'முந்நீர், வையத்தை ஆழ்த்திய காலத்தும் ஆழாததும், சம்பந்தர்க்கு இடமும் ஆகிய கழுமலம்' என்க. ஏகாரம், தேற்றம். கா - கடற்கரைச் சோலை. இது, 'கானல்' எனப்படும். கேதகம் - தாழம் பூ. போது - மற்றை மலர்கள். 'இவைகளில் தும்பி (வண்டுகள்) அடை கிடக்கும் கழுலம்' என்றபடி. 1204. குறிப்புரை: இப்பாட்டு, பகற்குறியில் தினைப்புனம் வந்த தலைமகனைத் தோழி கண்டு வரைவு கடாவுவாளாய், 'வேங்கை மரம் பூத்தது, இதனைக் காணின் எமர் தினைப் புனத்தைக்
|