பக்கம் எண் :

843ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

வெம்முனை வேலென்ன வென்ன மிளிர்ந்து வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ னுள்ளத் தொளிர்வனவே.

30

1212.ஒளிறு மணிப்பணி நாட்டும், உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண் டே?மிண்டி மீனுகளும்
அளற வயற்சண்பை நாத னமுதப் பதிகமென்னுங்
களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே.

31

1213.கவிக்குத் தகுவன, கண்ணுக் கினியன, கேட்கில்இன்பம்
செவிக்குத் தருவன, சிந்தைக் குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே.

32


அன்னை, 'அனை' என இடைக் குறைந்து நின்றது. எண் அன்னை யாய் - எம் தாய்க்குத் தாய். எந்தை யாய் - எம் தந்தைக்குத் தாய், 'இவர்களுடன் என்னையும் ஆண்டு' என்க. குழிமுழுதாண்டமை கூறியவாறு. மலர், தாமரை மலர். புறவம் - சீகாழி. அன்னீர் - போன்றவரே. தலைவியைத் தலைவன் பன்மைச் சொல்லால் உயர்த்துக் கூறினான், அவள் இன்னும் தனக்கு உரியவள் ஆகாமையின். அடுக்குப் பன்மை பற்றி வந்தது. மிளிர்தல் - சுழலுதல். அரி -செவ்வரிகள். ஒளிர்வன - ஒளிரும் கண்கள். 'எம் உள்ளத்து என்றபடி. 'உம் பார்வையின் தொடர்ச்சியால் எனது வேட்கை ஒருகாலைக்கு ஒருகால் மிகாநின்றது' என்பது கருத்து.

1212. குறிப்புரை: 'சண்பை நாதன் (தனது) 'பதிகம்' எனும் களிறுகளை விட, (அவை சென்று) புகுமேல், ஏனைத் தொண்டர்களது கவிதைகள் சில மூவுலகத்திலும் எதிர் நிற்பது உண்டே' எனக் கூட்டி முடிக்க.

மணி - மாணிக்கம். பனி நாடு - நாகலோகம். "உலகம்" என்றது இவ்வுலகத்தை. உம்பர் - வானுலகம். வெளிறு பட - உள்ளீடு இல்லாமை தோன்ற. இது ஞானசம்பந்தரது பாடலின் முன் ஏனைக் கவிதைகள் பெறும் மதிப்பீடு பற்றிக் கூறியதன்றி, எப்பொழுதும் உள்ள நிலை பற்றிக் கூறியதன்று. "உண்டே" என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், 'இன்று' என்னும் எதிர்மறைப் பொருளைத் தந்தது. மிண்டி - வலிமை பெற்று. அளறு - சேறு. அமுதப் பதிகம், உவமத் தொகை. பதிகம் என்னும் களிறு, உருவகம். உவமைப்பின் உருவகிக்கப் பட்டதாயினும் இது பலபொருள் உவமைப் பாலதே இரண்டிற்கும் பொதுத்தன்மை வேறு வேறு ஆகலின் அமைந்தது.

1213. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை.