பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை876

1279.மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.

98

1280.சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல் லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமிடற் றாயரு ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே.

99

1281.பிரமா புரம்வெங் குரு,சண்பை, தோணி, புகலி,கொச்சை
சிரமார் புரம்,நற் புறவந், தராய்,காழி, வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலம் பன்னிரு நாமமிப் பாரகத்தே.

100

 

.- ஒரு சீராக அமைக்கப்பட்ட பூமாலை. கற்பு உடை வாய்மொழி - கற்ற கல்வியை யுடைய வாயினின்றும் தோன்றும் சொற்களால். ஏத்தும் படி - துதிக்கின்ற முறையில். கதறிட்டு இவர - அலைகள் முழங்கிக் கொண்டு கரைமேல் ஏறுதலால். மல் படு தொல்லைக் கடல் - முத்து முதலிய செல்வங்கள் மிகுகின்ற பழைய கடல்.

1279. குறிப்புரை: அமண் - அமணர் குழாம். பண்ணைக் கழு - நிறைய நாட்டுப்பட்ட கழுமரம். கண் - கண்போன்றவர். கதி - யாவராலும் அடையப்படுபவர். திண்மை - நெருக்கம். தொடையல் - பூமாலை. சேர்ந்தனம் - புகலிடமாக அடைந்தோம். 'இனி எமக்கு யாது குறையுளது' என்பது குறிப்பெச்சம்.

1280. குறிப்புரை: '-திருஞானசம்பந்தரை யான் துதிப்பாடிய இந்தத் தமிழ்ப் பாடலை ஓதி உணர்ந்தவர் பெற்ற பேரின்ப உலகத்தை எமக்கு அருள் கூர்ந்து அளித்தல் வேண்டும் - என் மாலும் பிரமனும் நீரும், மலருங் கொண்டு. சிவபெருமானைக் கும்பிடுவர்' - என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். எனவே, இப்பாட்டு இப்பிரபந்தத்தின் பயன் கூறிற்றாம். காரும் - கறுத்த. பேரும் பா - தொடர்ந்து நடக்கும் பாட்டுக்கள்.

1281. குறிப்புரை: சிரமார் புரம் - சிரபுரம், தராய் - பூந்தராய். வரம் - மேன்மை. பரம் - மேன்மை. 'திருஞானசம்பந்தன் வரம் ஆர் பொழிற் பதிக்கு இப்பாரகத்துப் பன்னிருநாமம் பிரமாபுரம்.... கழுமலர்' என முடிக்க. இப்பாட்டின் இறுதிச்சீர் - இதன் முதற்பாடலிற் சென்று மண்டலித்தல் காண்க.