தனி வெண்பா 1282. | பாரகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும் ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின் தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன் நாமஞ் செவிக்கிசையா நாள். | | 101 |
திருச்சிற்றம்பலம்
1282. குறிப்புரை: 'தோணிபுரத் தலைவன் நாமம் செவிக்கு இசையா நாள், பாருலகத்தைக் கடந்து அமரர்களால் வணங்கப்படும் நாளாய் இருப்பினும் இன்னாது' என்க. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி முற்றிற்று.
|