பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை878

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

35. ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1283.பாலித் தெழில்தங்குபாரகம் உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம் நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.

1

1284.கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள் பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர் த புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

2

1285. குவளைக் கருங்கண் கொடியிடை துன்பந் தவிரவன்று
துவளத் தொடுவிடந் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன்
 

1283. ஆளுடைய பிள்ளையார்மீது நூறு கட்டளைக் கலித்துறைகளை அந்தாதியாக அருளிச் செய்த நம்பிகள், பின்னும் அவ்வாறான பத்துப் பாடல்களை, 'திருச்சண்பையர் விருத்தம்' என அருளிச் செய்கின்றார். 'சண்பை சீகாழி' என்பது மேற் பல இடங்களிலும் விளங்கி நின்றது.

குறிப்புரை: 'சண்பையர் காவலன் சம்பந்தன், பார் முகம் உய்ய (அருள்) பாலித்து, பறி தலையோர் மால் உற்று அழுந்த வெல்ல அவதரித்தோன்' என முடிக்க. 'வெல்ல' என்பது சொல்லெச்சமாய் வந்து இயையும். பறி தலை - மயிர் பறிக்கப் பட்ட தலை. அ மணி நீர் - நீல மணிபோலும் நீர், ஆலித்து - அசைந்து. அலர் - தாமரை மலர். அணங்கு - தெய்வம்; நாமங்கள், சாலி - நெற்பயிர். அது தலை வணங்குதற்கு இவ்வாறு காரணம் கற்பித்தது, தற்குறிப்பேற்ற அணி.

1284. குறிப்புரை: 'சம்பந்தன் குஞ்சி கூடாப் பருவத்துக் குன்ற வில்லி பங்கு தங்கும் மங்கைதன் அருள் பெற்றவன்' எனக் கூட்டி முடிக்க. கொங்கு - வாசனை. குஞ்சி கூடாப் பருவம் - தலை மயிர் கூட்டி முடிக்க வாராத பருவம்; குழவிப் பருவம். அருள் - ஞானப் பால். புணரி - கடல். வங்கம் - மரக்கலம். வயல் - உப்பளம்.

1285. குறிப்புரை: குவளைக் கருங்கண் கொடியிடை யாவாள் ஒரு வணிகப் பெண். 'கொடி இடை துவள' எனக் கூட்டுக. திவளுதல்