பக்கம் எண் :

885ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

5பிறந்தது 'கழுமலம்' என்னும் கடிநக ரதுவே;
வளர்ந்தது, தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே;
பெற்றது, குழகனைப் பாடிக் கோலக்காப்புக்(கு)
அழகுடைச் செம்பொன் தாளம் அவையே;
10தீர்த்தது,

தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே;
அடைத்த(து)அரசோ டிசையா அணிமறைக் காட்டுக்

15 குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே;

ஏறிற்(று), அத்தியும், மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகைமுன்னாட் பெற்றே;

20பாடிற்(று), அருமறைஓத்தூர் ஆண்பனை யதனைப்

பெருநிறம் எய்தும்பெண்பனை யாவே;
கொண்டது, பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆயிரமே;

25 கண்டது,

உறியோடுபீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே;
நீத்த(து), அவிழ்ச்சுவை யேஅறிந்(து) அரனடி பரவும்
தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே

30நினைந்த(து)

அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே;
மிக்கவர்,
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல

35 ஞானசம்பந்தன்இந் நானிலத் திடையே.

4

 

என்பது, அடுத்த பாடல் "நிலத்துக்கு" எனத் தொடங்குதலால் விளங்கும்.

முன் பாட்டு "அடி" என முடிந்தமையால் இப்பாட்டின் முதல் 'அரிசினம்' என்பதும் பாடமன்று.

அடு சினம் - போரில் பகைவரைக் கொல்ல எழுகின்ற சினம்.