5 | பிறந்தது 'கழுமலம்' என்னும் கடிநக ரதுவே; வளர்ந்தது, தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு பூங்குழல் மாதிடு போனகம் உண்டே; பெற்றது, குழகனைப் பாடிக் கோலக்காப்புக்(கு) அழகுடைச் செம்பொன் தாளம் அவையே; | 10 | தீர்த்தது, தாதமர் மருகற் சடையனைப் பாடிப் பேதுறு பெண்ணின் கணவனை விடமே; அடைத்த(து)அரசோ டிசையா அணிமறைக் காட்டுக் | 15 | குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே; ஏறிற்(று), அத்தியும், மாவும் தவிர அரத்துறை முத்தின் சிவிகைமுன்னாட் பெற்றே; | 20 | பாடிற்(று), அருமறைஓத்தூர் ஆண்பனை யதனைப் பெருநிறம் எய்தும்பெண்பனை யாவே; கொண்டது, பூவிடு மதுவில் பொறிவண் டுழலும் ஆவடு துறையிற் பொன்ஆயிரமே; | 25 | கண்டது, உறியோடுபீலி யொருகையிற் கொள்ளும் பறிதலைச் சமணைப் பலகழு மிசையே; நீத்த(து), அவிழ்ச்சுவை யேஅறிந்(து) அரனடி பரவும் தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே | 30 | நினைந்த(து) அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர் இக்கரை ஓடம் அக்கரைச் செலவே; மிக்கவர், ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல | 35 | ஞானசம்பந்தன்இந் நானிலத் திடையே. | | 4 |
என்பது, அடுத்த பாடல் "நிலத்துக்கு" எனத் தொடங்குதலால் விளங்கும். முன் பாட்டு "அடி" என முடிந்தமையால் இப்பாட்டின் முதல் 'அரிசினம்' என்பதும் பாடமன்று. அடு சினம் - போரில் பகைவரைக் கொல்ல எழுகின்ற சினம்.
|