கட்டளைக் கலித்துறை 1308, | தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல் காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து நாமரு வாதவர் போலழ கீந்துநல் வில்லிபின்னே நீர்மரு வாத சுரத் தெங்ங னேகுமென் நேரிழையே. | | 15 |
அகவற்பா 1309. | இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத் தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே; காமர் சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின் றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும் | 5 | பாய்கிளி யிரியப் பையவந் தேறி |
1308. குறிப்புரை: இஃது அகப் பொருள் உடன்போக்கில் நற்றாய் தலைவியது மென்மைத் தன்மை நினைந்து இரங்கிய துறையாகச் செய்யப்பட்டது. இன்னோரன்னவற்றை, 'அனை மருட்சி' என்பர். "நேரிழை" - என்பதை, 'மருவாதவர் போல" என்பதன் பின் கூட்டியுரைக்க. மா தவிசு - சிறந்த ஆசனம். நான்முகன் தன்பதி, சத்திய லோகம் சீகாழி 'பிரமபுரம்' எனப்படுதலால் அதனை, "நான்முகன் தன்பதி போல் சீர் வளர் காழி" - என்றார். சீர் வளர் -சிறப்பு மிக்க. கவித் திறத்து நா மருவாதவர் - பாடல் வகைகளில் நாப் பொருந்தாதவர்கள்; பாடாதவர்கள். "அவர்களே, மெய்வருந்தப் பெற்று, நீரும் நிழலும் இல்லாத பாலை வனத்தில் வாழ்வோராவர்" - என்பதாம். "ஈந்து" - என்றது, 'நீங்கப் பெற்று' என்றபடி. வில்லை - வில்லை ஏந்திக் காத்துக் கொண்டு போகும் தலைவன், "நீர் மருவாத சுரம்" - என்றது, சுரத்தினது இயல்பை எடுத்துக் கூறியவாறு. "நீர்மரு" என்பது ஆசெதுகை. நேர் இழை - நுணுகிய வேலைப்பாடு அமைந்த அணிகலம். 1309. குறிப்புரை: இஃது அகப்பொருள் களவியலில் பகற் குறி இடையீட்டில் தலைவி செறிக்கப் பட்டமையின் தலைவன் குறியிடத்துச் சென்று தலைவியைக் காணாது, களம் நோக்கி மறுகுதலாகிய, 'வறுங்களம் நாடி மறுகல்' என்னும் துறையாகச் செய்யப்பட்டது. இழை கெழு - அணிகலன்கள் பொருந்திய. "மென்முலை" என்பது அடையடுத்த ஆகுபெயராய்த் தலைவியைக் குறித்தது. பின்
|