அகவற்பா 1315. | புனலற வறந்த புன்முளி சுரத்துச் சினமலி வேடர் செஞ்சுர முரீஇப் படுகலைக் குளம்பின் முடுகுநாற்றத் தாடு மரவி னகடு தீயப்
| 5 | பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும் பொறிவரிப் புறவே!யுறவலைகாண்நீ நறைகமழ் தேம்புனல் வாவித் திருக்கழுமலத்துப் பையர வசைத்ததெய்வ நாயகன் | 10 | தன்னருள்பெற்ற பொன்னணி குன்றம் மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல் வினையே னிருக்கும் மனைபிரி யாத வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை | 15 | ஏதிலன்பின்செல விலக்கா தொழிந்தனை ஆதலின் புறவே யுறவலை நீயே. | | 22 |
1315. குறிப்புரை: இஃது அகப்பொருள். களவியலில் உடன் போக்கின்கண் செவிலி பின் தேடிச் செல்லுமிடத்துக் குரவொடு புலம்பல் பெரும்பான்மையாகச் சிறுபான்மை வரும் புறவொடு புலம்பலாகச் செய்யப்பட்டது. புறவு - புறா; இது பாலை நிலப் பறவை. வறத்தல் - வற்றுதல். வறந்த - வறந்தமையால். புல், தரையிற் பரவிய புற்கள். முளி - உலர்ந்த. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது1 என்றது காண்க. சரம் உரீஇ - அம்பு பட்டு உருவியதனால். படு கலை - இறந்த ஆண் மான். மானை வேட்டையாடிய வேடர், அதன் குளம்பை 'பயன் இல்லது' என போகட்டுப் போதலின், அது வெயிலால் உருகி மிகத் தீ நாற்றத்தை உண்டாக்கிற்று என்க. 'நாற்றத்தை யுடைய சுரம்' என்க. ஆடும் அரவு - படம் எடுத்து ஆடும்
1. திருக்குறள் - 16.
|