பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை904

காரு முணர்ந்திலர் ஞானசம் பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம் யான்சங்கு தாங்குவதே.

24

அகவற்பா

1318. தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
சுவடிச் சிறுகாற் கற்கட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
5துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்

காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த

10முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே

வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்

15இங்குத் தணந்தெய்தி நுமரும்
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.

25

 

1317. குறிப்புரை: இப்பாட்டுப் பிறர் கூற்றாய் வாராது; தலைவி கூற்றாய் வந்தமையின், பாடாண் கைக்கிளையாகாது, அகப்புறக் கைக்கிளையாய் "உட்கோள்"1 என்னும் துறையின தாம்.

ஊரும் - ஏறிச் செல்கின்ற. பசும் புரவி - பச்சைக் குதிரை இவை பூட்டப்பட்ட தேர் சூரியனுடையது. கூரும் - மிகுகின்ற இருளொடு கண் துயிலாது கூவுகின்ற கோழி யாமக் கோழி. கொடு வினையேற்கு - கொடிய வினையை உடையேனாகிய என் பொருட்டாக. ஆரும் உணர்ந்திலர் - (தோழி உட்பட) யாரும் விழித்திருக்கவில்லை. சங்கு - சங்க வளையல்.

1318. குறிப்புரை: இஃது அகப் பொருட் களவியலில் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்த தலைவன் வரவு நீட்டிக்கத் தலைவி இரங்கிய காமம் மிக்க கழிபடர் கிளவியாகச் செய்யப் பட்டது. கழி படர் - மிக்க துன்பம். துன்ப மேலீட்டால் தன் சொற் - கேட்க மாட்டாத


1. புறப்பொருள் வெண்பாமாலை - 296.