| தோடணிகா தினனென்றுந் தொல்மரர்க் கெஞ்ஞான்றும் தேடரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருளை அந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி உந்தைக்குக் காண,வர னுவனாமென்(று) உரைத்தனையே |
அராகம் | வளம்மலி தமிழிசை வடகலை மறைவல முளரிநன் மலரணி தருதிரு முடியினை. | | (1) |
| கடல்படுவிடமடை கறைமணி மிடறுடை அடல்கரி யுரியனை யறிவுடை யளவினை. | | (2) |
பெயர்த்தும் தாழிசை | கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவன்அடிமேல் பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே. | | (1) |
| பன்மறையோர் செய்தொழிலும், பரமசிவா கமவிதியும் நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே. | | (2) |
என்பர். ‘சுலோசனா’ - என்பது வடமொழி. அமிர்து - உணவு; சோறு போனகம் - உண்டி. தாழிசை - 3 ‘உவன் அரன் ஆம்’ - என மாற்றிக் கொள்க. உவன் - நீர், “எச்சில் மயங்கிட உனக்கு ஈதுஇட்டாரைக் காட்டு”1 என வினாவிய அவன். அராகம் - 1 “மறை வல” என்னும் குறிப்புப் பெயரெச்சத்திற்கு, “முளரிநன் மலரணதரு திருமுடியினை” என்னும் தொடர்மொழி, ‘அந்தணன்’ என ஒரு சொல் நீர்மைத்தாய் முடிபாயிற்று. அராகம் - 2; கறை - நஞ்சு. அறி - அறிதல். முதனிலைத் தொழிற் பெயர். ‘உடைய’ என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. அளவு - பெருமை. பெயர்த்தும் தாழிசை - 1; பரம்ப - பரவுதலால் பரவியது பலவிடத்தும் சென்று பாடியதால். தாழிசை - 2: பன்மறையோர், வைதிக அந்தணர்களும், சிவ மறையோர்களும். செய் தொழில் - செயற் பாலனவாகிய தொழில்கள். ‘ஒழுக்கம்’ என்றபடி. அகப் புற நூல்களாகிய
1. பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் - 73.
|