நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் | அணிதவத் தவர்களுக்(கு) அதிகவித் தகனும்நீ; (1) தணிமனத் தருளுடைத் தவநெறித் கமிர்தம்நீ; (2) அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ: (3) தமிழ்நலத் தொகையினில் தகுகவைப் பவனும்நீ; (4) |
மூச்சீர் ஓரடி அம்போதரங்கம் | மறையவர்க் கொருவன் நீ: (1) மருவலர்க் குருமு நீ; (2) நிறைகுணத் தொருவன் நீ; (3) நிகரில்உத் தமனும் நீ; (4) |
இருசீர் ஓரடி அம்போதரங்கம் அரியை நீ; (1) அறவன் நீ; (3) | எளியை நீ; (2) துறவன் நீ; (4) |
தந்திரங்களைவிலக்குதற்கு, “பரம சிவ ஆகமம்” - என்றார். இஃதே பற்றிச் சேக்கிழார், வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க . . . . . . . . . . . . . . . புனிதவாய் மலர்ந்தழுத .....புகலித் திருஞான சம்பந்தர்1 என்றார். ஒழிவின்றி - எஞ்சாமல். நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் - அணி தவம் - சிவ புண்ணியம். ‘அவர்களுக்கு அறிவிக்கும்’ என ஒரு சொல் வருவிக்க. வித்தகம் - சதுரப்பாடு; திறமை. அமிர்தம் - அமிர்தம் போல்பவன்; அழியாதபடி. காப்பாற்றினவன். நுதி - நுனி; முனை. ‘தக’ என்பது இறுதிநிலை தொக்கு, “தகு” என நின்றது. முச்சீர் ஓரடி அம்போதரங்கம் - மருவலர் - பகைவர். சிவநெறிக்குப் பகைவரே பிள்ளையார்க்குப் பகைவர். உரும் - இடி. உகரம் சந்தி. இருசீர் ஓரடி அம்போதரங்கம் - அருமை புறநெறி யாளர்க்கு. எளிமை சிவநெறியாளர்க்கு. அறவன் - அறத்தை அறிவுறுத்துபவன்.
1. பெரியபுராணம் - திருஞான சம்பந்தர் - 1
|