எழுசீர்க் கழிநெடிற் சந்த விருத்தம் 1329. | நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்ப நனி | | பனிமதி அணைந்த பொழில்சூழ் | | பொலமதில் இரும்புகலி அதிபதி, விதம்பெருகு | | புனிதகுணன், எந்தம் இறைவன், | | பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன், மிகு | | பரசமய வென்றி அரிதன் | | சலமலி தரும்கமல சரண் நினைவன், என்றனது | | தகுவினைகள் பொன்றும் வகையே. | | 5 |
கவண் எறிதலாகக் கொள்க. “புனம் காத்தல் உமது தொழிலாக எனக்குத் தெரிய வில்லை; இனிய தோற்றத்தாலும், குரலாலும் என் உள்ளத்தைக் கவர்தலே உமது தொழிலாக எனக்குத் தெரிகின்றது” - என்பான். “சிந்தை கொள்வது உம் செய்தொழில் ஆனால்” - என்றான். “ஆனால்” என்பது தெளிவின்கண் வந்தது. மாற்றம் - மறுமொழி. ‘மறுமாற்றம்’ என்றும் சொல்லப்படும். ‘யான் வினாய வினாவிற்கு உரிய விடை’ என்பது பொருள். வாசி - மதிப்புக் குறைவு. குற மாது நல்லீர் - பிறப்பால் குற மகளிராய் உள்ள, அழகுடையவர்களே. இதனை முதலிற் கொள்க. 1329. குறிப்புரை: புவனி - புவனம்; உலகம் நிறை செய் - நிறைதலைச் செய்கின்ற. அஃதாவது, நிறைந்த, புகழ், இன்பம், பொழில், மதில் இரை அனைத்தும் புகலிக்கு அடை. பனி - குளிர்ச்சி. மதி - சந்திரன். இது பொழிலுக்கு அடை. விதம் பெருகு புனித குணன் - வகைகள் பலவாகிய தூய பண்புகளை உடையவன். இறைவன் - தலைவன். பல மலி - பலவாக நிறைந்த. ‘பலம் மலி’ எனப் பிரித்து, ‘பயன் நிறைந்த’ என்றும் பொருள் கொள்ளலாம். ‘தமிழன் விடங்கன், வடகலை விடங்கன்’ - எனத் தனித்தனி இயைக்க. “தமிழின்” என்பதில் ‘இன்’ சாரியை நிற்க, இரண்டன் உருபு தொக்கது. விடங்கன் - அழகன். பரசமய அரி; (கோளரி - சிங்கம்) வென்றி - வெற்றியை உடைய. ‘தன் சரண்’ என இயையும். சரண் - திருவடி. சலம் மலி - நீரில் நிறையப் பூக்கின்ற. “கமல சரண்” என்னும் உவமத் தொகை வட நூல் முடிபை ஏற்றது. “புகலி அதிபதி” முதலாகச் சொல்லப்பட்ட அவனது சரண்களை எனது வினைகள் பொன்றும் வகை நினைவன்’ - என வினை முடிக்க. தகுதி, இங்குத் தனக்கே உரிய ஆதல். பொன்றுதல் - அழிதல். “வகையால்” என்பதில் தொக்கு நின்ற மூன்றன் உருபு, ‘இது பயனாக’ என்னும் முதனிலைப் பொருளில் வந்தது.
|