எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1344. | வன்பகை யாமக் குண்டரை வென்றோய்! | | மாமலர் வாளிப் பொருமத வேளைத் | | தன்பகை யாகச் சிந்தையுள் நையும் | | தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்; | | நின்புகழ் பாடிக் கண்பனி சோரா | | நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்(டு) | | அன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம் | | அம்பொழில் மாடச் சண்பையர் கோவே. | | 20 |
மறம் - எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1345. | கோவின்திரு முக மீதொடு வருதூதுவ! ஈரக் | | குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி ஈசம் | | மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திற மணஅம்! | | மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன் | | பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன் | | பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள் | | தூவேரியை மடுமின்!துடி யடிமின்;படை யெழுமின்; | | தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே. | | 21 |
வாசம் - நறுமணம். திரை - கடல் அலை. சேவல் சேரும் அன்றில் - அது, சேவலை அழைக்கும் குரலைக் குறித்தது. ஆகுபெயர். வேய் - வேய்ங்குழல். மாலையில் இஃது ஆயரால் ஊதப்படுவது. கூடி - இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து. “திரை, வாடை” - என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. தென்றலையும் வாடையையும் ஒருங்கு கூறியது, ‘தென்றற் காலத்தில் தென்றலும் பகையாகின்றது; வாடைக் காலத்தில் வாடையும் பகையாகின்றது’ என்றபடி. 1344.குறிப்புரை: இப்பாட்டு, பாடாண் கைக்கிளையுள் தலைவிக்குரிய தூதாகிச் சென்ற தோழி கூறும் ‘தூதிடையாடல்’ - என்னும் துறையாகச் செய்யப்பட்டது. “நின்புகழ் பாடி” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. “நின்புகழ் பாடி... மெய்ச் சிந்தையர்” - எனப்பட்டார் ஞானசம்பந்தர்க்கு அன்பராய நல்லோர். ‘இன்பாம் கோ’ என இயைத்து, ‘அவர் இன்புறுதற்குத் துணையாம் தலைவனே’ என உரைக்க. 1345.குறிப்புரை: ‘மறம்’ என்பதும் கலம்பக உறுப்புக்களுள் ஒன்று. இது தம்மை மதியாது தம் மகளை எளிதில் தனக்குக் கொடுக்கும்படி ஓலை கொடுத்து விடுத்த தூதனைக் கண்டு மறவர்
|