பதின்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1360. | தொகுவார் பொழில்றற் றியவான் மதிதோ யுமதிற் கனமார் | | தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருங்கியசீர் | | மிகுகா ழியன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார் | | விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம் | | மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய் | | வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)றூழி இலக்கிதமாய்த் | | தகுவாழ்வு நிலைத் தொழில்சே ரறமா னபயிற் றுவர்மா | | சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக்கடலே. |
நேரிசை ஆசிரியப்பா | 1361. | கருமங் கேண்மதி! கருமங் கேண்மதி! | | துருமதிப் பாண கருமங் கேண்மதி! |
1360.குறிப்புரை: இப்பாட்டு, திருஞானசம்பந்தரது திருவடிகளையே துணையாகக் கொள்பவர் அடையும் பயன்களைக் கூறுகின்றது. “பொழில் சுற்றியனவும், மதி (சந்திரன்) தோயப் பெறுவனவும் ஆகிய மதில்களினுள், கனம் ஆர் (மேகங்கள் தவழும்) திருப்பொழில்களை யுடைய மாளிகைகளும், மாடங்களும் நெருங்கியுள்ள சீர் மிகு காழி” - என்க. “தமிழாகரனது மேதகு கழல், விரை ஆர் கழல், கமலக் கழல்” - எனத் தனித் தனி முடிக்க. பொன் - அழகு. புனை தார் விரை - தோளில் அணிந்த மாலை (பாதம் அளவு தூங்கிப்) புரளுதலால் உண்டாகும் நறுமணம் கமலக் கழல் தாமரை மலர் போலும் திருவடி. மகர ஆதர நித்தில நீர் நிலைஆர் புவி - சுறா மீன்களுக்கு வாழும் இடமாயும், முத்துக்களை உடையதாயும் உள்ள கடல் நீரின்கண் நிற்றல் பொருந்திய பூமி. வரலாறு - பண்டு தொட்டு உயிர் வாழ்ந்து வரும் வரவு (பிழைப்பிலர் - நீங்கப் பெறாதவராய் ஊழிதொறு) ஊழி இலக்கிதமாய் - பல பல ஊழிகளிலும் பலராலும் காணப் படுபவர்களாய்) அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி ஏடெழுதினோரால் விடப்பட்டதாக எண்ண வேண்டி யுள்ளது. இலக்கிதம் - இலக்கியம்; குறிக்கொண்டு நோக்கப்படும் பொருள். ‘அறம்’ என்னாது “எழில் சேர் அறம்” என்றமையால் அவை சிவபுண்ணியங்களாம் என்க. பயிற்றுவர் - எப்பொழுதும் செய்வார்கள். சதுர் - திறல். இப்பாட்டினை, “பன்னிரு சீர்க் கழிநெடிலடியை உடையது” - எனக் கொள்வாரும் உளர். அது சிறவாமையை அறிந்து கொள்க.
|