| நிரம்பிய பாடல் நின்கண் ணோடும் | | அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக் | 5 | காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின் | | தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே | | இறுகுபு, சுள்ளி இயற்றிய குரம்பை | | உறுசெறுத் தனைய வுருவுகொண்(டு) உள்வளைஇ | | இன்னிசை நல்லி யாழ்தமந்(து) அன்னம் | 10 | மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் | | சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது | | நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்(து) | | இன்புற் றிருநிதி எய்தும் அதுநுன(து) | | உள்ளத்(து) உள்ள தாயின், மதுமலர் | 15 | வண்டறை சோலை வளவயல் அகவ, | | ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகழ் | | உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக் | | கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக் | | கனகப் பருமுரண் கணையக் கபாட | 20. | விளையக் கோபுர விளங்கெழில் வாயில் | | நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும் | | மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த | | செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய | | மாளிகை ஒளிச் சூளிகை வளாகம் | 25. | அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய | | நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர | | வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட | | மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச் | | செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக் | 30. | கழுமல நாதன், கவுணியர் குலபதி, | | தண்டமிழ் விரகன், சைவ சிகாமணி, | | பண்டிதர் இன்பன், பாசமய கோளரி | | என்புனை தமிழ்கொண்(டு), இரங்கிஎன் உள்ளத்(து) | | அன்பினை யருளியஆண்தகை தன்புகழ் | 35. | குறைவறுத்(து) உள்கி, நிறைகடை குறுகி | | நாப்பொலி நல்லிசை பாட, | | மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. | | 37 |
|
|