பக்கம் எண் :

983ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

9. பொற்கிழி பெற்றது

திருவா வடுது றையில் செம்பொற் கிழிஒன்(று)
அருளாலே பெற்றருளும் ஐயன்; தெருளாத

10. பாண்டிய நாட்டில் நீற்றொளிபரப்பியது

20தென்னவன்நா டெல்லாம் திருநீறு பாலித்த

11. விடம் தீர்த்தது

மன்னன்;) மருகல்விடம் தீர்த்தபிரான்; (பின்னைத்தென்

12. பொற்றாளம் பெற்றது

கோலக்கா வில்தாளம் பெற்று(இக்) குவலயத்தில்

13. முத்துச் சிவிகைபெற்றது

முத்தின் சிவிகை அரன் கொடுப்ப,முன்னின்று

25 தித்தித்த பாடல் செவிக்களித்தான்; (நித்திலங்கள்

14. மறைக் கதவம் அடைத்தது

மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான்; (நீடும்

15. ஆண்பனை பெண்பனை யாக்கியது

திருவோத்தூர்ஆண்பனையைப் ‘பெண்பனைஆ’ கென்னும்
பெருவார்த்தை தான்உடைய பிள்ளை; (மருவினிய

16. ஓடம் கரையேறவிட்டது

30

கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப

உள்ளமே கோலாகஊன்றினான்; (வள்ளல்

(அடி-17) பாலையும் நெய்தலும் பாட வலான் - பாலை நிலத்தையும், நெய்தல் நிலத்தை ஒருங்கு சேர்த்துப் பாடி அதனாலே பாலை நிலத்தை நெய்தல் நிலமாகச் செய்ய வல்லவன்.

(அடி-19) அருளால் - சிவபெருமானது திருவருளால். ஐயன் - தலைவன்.

(அடி-20) தென்னவன் - பாண்டியன். வழங்குதலை, ‘பாலித்தல்’ என்பது மரபு.

(அடி-25) செவி - அரன் செவி. நித்திலங்கள் - முத்துக்கள்.

(அடி-29) பெரு வார்த்தை - புகழ்.