பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை988

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

40. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை

சந்தவிருத்தம்
திருச்சிற்றம்பலம்

தனன தானத் தனதனத்தன

1375.புலனோ டாடித் திரிமனத்தவர்

பொறிசெய் காமத் துரிசடக்கிய

புனித நேசத் தொடுதமக்கையர்

புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்


சுலவு சூலைப் பிணிகெ டுத் தொளிர்

சுடுவெ ணீறிட் டமண கற்றிய

துணிவி னான்முப் புரமெ ரித்தவர்

சுழலி லேபட் டிடுத வத்தினர்


உலகின் மாயப் பிறவி யைத்தரும்

உணர்வி லாவப் பெரும யக்கினை

ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல

உபரி பாகப் பொருள்ப ரப்பிய


அலகில் ஞானக் கடலி டைப்படும்

அமிர்த யோகச் சிவவொ ளிப்புக

அடிய ரேமுக்(கு) அருளி னைச்செயும்

அரைய தேவத் திருவ டிக்களே. 

1



தேவர் - சுவாமிகள். ஏகாதசம் - பதினொன்று, அவ் எண்ணும் பெயர் ஆகுபெயராய் அத்துணையவாய பாடல்களைக் குறித்தது.

ஏகாதச மாலை - பதினொரு பாடல்களால் ஆகிய தொடையல். ‘மாலை’ என்பதால் இதற்கு வரும்பாடல்கள் சொற்றொடர் நிலையாக அந்தாதியாய் வரும்.

பாட்டு:1 இதன் பொருள், உலகில் மாயப் பிறவியைத் தரும் பெருமயக்கினை - இவ்வுலகில் நிலையில்லாதனவாகிய பல பிறவிகளைத் தருவதான அந்தப் பெரிய திரிபினை.