1
இயற்கைப்
புணர்ச்சி
1.4 நயப்பு
நயப்பு என்பது தெய்வம் அல்லளென்று
தெளிந்த பின்னர் மக்களுள்ளாள் என்று நயந்து இடை யில்லைகொலென்ற நெஞ்சிற்கு அல்குலும் முலையுங்காட்டி
இடையுண்டென்று சென்றெய்த நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்-
4. அகல்கின்ற வல்குற் றடமது
கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற்
றோன்றில்லை
யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
னம்மன்ன பல்வளைக்கே.
8
_________________________________________________
அவ்வகை தெய்வம் கொல்லோவென்றையுற்று
நின்றான் இவ்வகை குறிகண்டு தெய்வமல்லள் மக்களுள்ளாளெனத் துணிந்தானென்பது. எனவே, தெய்வமல்லளாதற்குக்
காரணம் இனையன குறியே வேற்றுமை இல்லை என்பது துணிவு.
1.4. வண்டமர் புரிகுழ லொண்டொடி
மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள்
ளியது.
இதன் பொருள் : அகல்கின்ற
அல்குல் தடம் அது - அகலா நின்ற வல்குலாகிய தடம் அது; கொங்கை அவை - முலை அவை; நெஞ்சு அவம்
நீ புகல்கின்றது என்னை - நெஞ்சே காரணமின்றி நீ சொல்லுகின்றதென்!; அடையார் புரங்கள் இகல்
குன்றவில்லில் செற்றோன் - அடையாதார் புரங்களது இகலைக் குன்றமாகிய வில்லாற் செற்றவன்; தில்லை
ஈசன்-தில்லைக்கணுளனாகிய வீசன்; எம்மான் - எம்முடைய இறைவன்; எதிர்ந்த பகல் குன்ற பல் உகுத்தோன்
- மாறுபட்ட ஆதித்தனது பெருமை குன்றப் பல்லை உகுத்தோன்; பழனம் அன்ன பல்வளைக்கு இடை உண்டு -
அவனது திருப்பழனத்தை யொக்கும் பல்வளைக்கு இடையுண்டு எ-று.
தடம் - உயர்ந்தவிடம்.
அல்குற்றடமது கொங்கையவை என்புழி அல்குற்பெருமையானும் முலைப்பெருமையானும்
|