பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
133

1

இயற்கைப் புணர்ச்சி

1.6. தெய்வத்தை மகிழ்தல்

   
தெய்வத்தை மகிழ்தல் என்பது உட்கொண்டு நின்று, என்னிடத்து விருப்பத்தையுடைய இவளைத்தந்த தெய்வத்தை அல்லது வேறொரு தெய்வத்தை யான் வியவேனெனத் தெய்வத்தை மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

6.  வளைபயில் கீழ்கட னின்றிட
      மேல்கடல் வான்நுகத்தின்
  துளைவழி நேர்கழி கோத்தெனத்
      தில்லைத்தொல் லோன்கயிலைக்
  கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
      கண்ணியைக் கொண்டுதந்த
  விளைவையல் லால்விய வேன்நய
      வேன்தெய்வ மிக்கனவே.

6

_______________________________________________________________

    கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு
    முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி
    னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே.

-தொல்.பொருள். மெய்ப்பாட்டியல் - 27

என்றாராகலின். பயன்: தலைமகளது குறிப்பறிந்து மகிழ்தல், பிணியுமதற்கு மருந்துமாம் பெருந்தோளி படைக்கண்களென் றமையின், அவளுடம்பாட்டுக் குறிப்பு அவள் நாட்டத்தானுணர்ந்தானென்பது. என்னை,

நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
    கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்.

-தொல். பொருள். களவியல் - 5

என்றாராகலின்.

1.6.  அன்ன மென்னடை அரிவையைத் தந்த
    மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.

   
இதன் பொருள் : வளை பயில் கீழ் கடல் நின்று இட - சங்கு நெருங்கின கீழ்த்திசைக்கடலிலே நின்று இட;  நேர்கழி மேல் கடல்