1
இயற்கைப்
புணர்ச்சி
1.7. புணர்ச்சி துணிதல்
புணர்ச்சி துணிதல் என்பது தெய்வத்தை
மகிழாநின்றவன் இது நமக்குத் தெய்வப் புணர்ச்சி எனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி அவளோடு
புணரத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள்-
7. ஏழுடையான்பொழி லெட்டுடை
யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
பொன்னிவ்
வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும்
விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
காய்வந் தகப்பட்டதே.
7
_______________________________________________________________
வான்நுகத்தின் துளைவழி
கோத்தென - அவ்வொத்தகழி மேற்றிசைக் கடலில் இட்ட பெரிய நுகத்தினது துளைக்கட்சென்று கோத்தாற்
போல; தில்லைத் தொல்லோன் கயிலை கிளை வயின் நீக்கி - தில்லை யிடத்துப் பழையோனது கயிலைக்கண்
ஆயத்தாரிடத்து நின்று நீக்கி ;
இகெண்டை கண்ணியைக் கொண்டு தந்த விளைவை அல்லால் - இக்கெண்டை போலும் கண்ணையுடையாளைக் கைக்
கொண்டு தந்த நல்வினையின் விளைவாகிய தெய்வத்தை அல்லது; மிக்கன தெய்வம் வியவேன் நயவேன்
- மிக்கனவாகிய பிற தெய்வத்தை வியப்பதுஞ் செய்யேன்; நயப்பதுஞ் செய்யேன் எ-று.
கயிலைக்கட் கொண்டுதந்த வெனவியையும்,
இவளைத்தந்த தெய்வத்தையல்லது நயவேனென்று அவளது நலத்தை மிகுத்த மையின், இதுவும் நலம் பாராட்டல்.
பயந்தோர்ப்பழிச்சற் (தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்துதல்) பாற்படுத்தினுமமையும்.
மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை. பயன்: மகிழ்தல்.
1.7. கொவ்வைச் செவ்வாய்க்
கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல்
துணிந்தது.
இதன் பொருள் : பொழில்
ஏழு உடையான்-பொழில் ஏழு உடையான்; புயம் எட்டு உடையான்-புயம் எட்டுடையான்; முன் என்னை ஆள்
ஊழ் உடையான்-எனக்கு ஆட்படுந்தன்மை உண்டா
|