2
பாங்கற் கூட்டம்
2.1 பாங்கனை நினைதல்
பாங்கனை நினைதல் என்பது
தெய்வப்புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்துதற் கருமைநினைந்து வருந்தாநின்ற தலைமகன் அவள் கண்ணாலறியப்பட்ட
காதற்றோழியை நயந்து, இவள் அவட்குச்சிறந்த துணையன்றே; அத்துணை எனக்குச் சிறந்தாளல்லள்; எனக்குச்
சிறந்தானைக்கண்டு இப்பரிசுரைத்தாற் பின்னிவளைச் சென்றெய்தக் குறையில்லையெனத் தன்காதற்
பாங்கனை நினையாநிற்றல், அதற்குச் செய்யுள்-
19. பூங்கனை யார்புனற் றென்புலி
யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண்டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே
19
_______________________________________________________________
2.1. எய்துதற் கருமை யேழையிற்
றோன்றப்
பையு ளுற்றவன் பாங்கனை நினைந்தது.
இதன் பொருள்: பூ கனை ஆர்
புனல் புலியூர் அம்பலத்து புரிந்து - பூக்களையுடைத்தாய் முழங்குதனிறைந்த புனலையுடைத்தாகிய தென்புலியூரம்பலத்தின்கண்
விரும்பி ; ஆங்கு எனை ஆண்டு கொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே பாங்கனை - அவ்வாறென்னை யாண்டுகொண்டு
ஆடும் பிரானுடைய அடியாகிய தாமரைகட்கே பாங்காயுள்ளானை; யான் அன்ன பண்பனை - என்னையொக்கு
மியல்பையுடையானை; கண்டு இப்பரிசு உரைத்தால்-கண்டு நிகழ்ந்த விப்பரிசையுரைத்தால்; மடம்
பாவையை எய்துதற்கு ஈங்கு எனை தடுப்பார் யார்-மடப் பாவையை எய்துதற்கு இவ்வுலகத்தின்கண் என்னைத்தடுப்பார்
யாவர்? ஒருவருமில்லை எ-று.
அம்பலத்துளாடும் பிரானெனவியையும்,
தென்புலியூர் புரிந்தம்பலத்துளாங்கெனை யாண்டு கொண்டென்பதற்குப் பிறவு முரைப்ப. ஆங்கென்றார்
ஆண்டவாறு சொல்லுதற் கருமையான். ஏழையினென்புழி. இன்: ஏழனுருபு; அது புறன்டையாற் கொள்ளப்
|