பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
151

2

பாங்கற் கூட்டம்

2. 2 பாங்கன் வினாதல்

   
பாங்கன் வினாதல் என்பது தன்னை நினைந்து வாராநின்ற தலைமகனைத் தான் எதிர்ப்பட்டு அடியிற்கொண்டு முடிகாறுநோக்கி, நின்னுடைய தோள்கள் மெலிந்து நீ யில்வாறாதற்குக் காரண மென்னோவென்று பாங்கன் முந்துற்று வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

20. சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
      பலத்துமென் சிற்தையுள்ளும்
   உறைவா னுயர்மதிற் கூடலின்
      ஆய்ந்தவொண் டீந்தமிழின்
   துறைவாய் நுழைந்தனை யோவன்றி
      யேழிசைச் சூழல்புக்கோ
   இறைவா தடவரைத் தோட்கென்கொ
      லாம்புகுந் தெய்தியதே.

20

________________________________________________________________

பட்டது, பையுள்-நோய்; மயக்கமெனினு மமையும். மெய்ப்பாடு: அசைவுபற்றி வந்த அழுகை. என்னை,

இளிவே யிழவே யசைவே வறுமையென
    விளிவில் கொள்கை யழுகை நான்கே

- தொல். பொருள். மெய்ப்பாட்டியல். 5

என்றாராகலின். பயன்: ஆற்றாமை நீங்குதல். மேற்றோழியால் என்குறை முடிக்கலாமன்று கருதிப் பெயர்ந்த தலைமகன் பாங்கனால் முடிப்பலெனக்கருதினானென்பது. என்னை, தமரான் முடியாக் கருமை முளவாயினன்றே பிறரைக் குறையுற வேண்டுவதென்பது. 19

2.2.
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட

     இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.

   
இதன் பொருள் : சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என்சிந்தையுள்ளும் உறைவான்-காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில்லைச்சிற்றம்பலமாகிய நல்லவிடத்தும் என்னெஞ்சமாகிய தீயவிடத்தும் ஒப்பத்தங்குமவனது; உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒள் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ-உயர்ந்த மதிலையுடைய கூடலின்கணாராய்ந்த ஒள்ளிய வினிய தமிழின்றுறைகளிடத்து